ஒரு தங்கைக்கு தோள் தந்து
ஒரு அண்ணன் அங்கு தாயாகிறான்...
நண்பனின் தோள் மட்டுமல்ல
மடியும் இருக்கிறது உறங்க
என உறங்குகிறான் நண்பன் ஒருவன்...
அங்கங்கு அமர்ந்திருந்த காதலர்களில்
காதலனின் மார்பினில் காதலிகள்
தஞ்சம் புகுந்தனர்...
அங்கு அந்த காதலன் தாயாகிறான்.
கட்டப்பட்ட தூளியில்
குழந்தை அழுதிருக்க...
அவளுக்கோ தாலாட்டத் தெரியவில்லை
இருப்பினும் உறங்குது குழந்தை...
அனுமதிக்கப்பட்ட சிலருக்கு
தனிமையும் அதற்கு துணையாய்
கேசம் கோதிய காற்றும்
அதனுடன் தாயாக
அனைவரும் உறங்கினோம்
தண்டவாளத்தின்
தடக் தடக் தாலாட்டில்.
No comments:
Post a Comment