Wednesday, 25 January 2012

இந்தியாவின் விதி

மிளகு திருட கடல் கடந்து
வந்தவனுக்கு வாசல் திறந்து
வாணிகம் என நம்பி அடிமையானோம்...
வளங்கள் அனைத்தையும்
சுரண்டி தந்து கப்பம் கட்டி
கைகட்டி நின்றோம்..

தட்டிக்கேட்டவனுக்கு தூக்கும்
எதிர்த்து நின்றவனுக்கு தோட்டாக்களும்
பரிசாய் வாங்கினோம்...

விடுதலை வேண்டி காத்துக் கிடந்து...
கிடைத்தது ஒரு நாள்...
சட்டம் இயற்றி குடியரசானோம்...
காலமும் கடந்தது...

வேதங்கள் எழுதிய நாட்டில் இன்று
தீவிரவாதம் பயங்கரவாதம்
என்று வாதங்கள் செய்துகொண்டிருக்கிறோம்...

கடல் கடந்து கொடி நாட்டினோம்...
இன்றோ
கடல் கடந்து அகதிகளாய் குடியேறுகிறோம்...

ஆறறிவு கொண்ட ஆட்டு மந்தைகளாய்...
மதத்துக்கு ஒரு விதி..
பணத்துக்கு தரும் நீதி...
ஊருக்கு ஒரு சாதி சங்கம்...
இது ஒற்றுமை மிகுந்த நாடாம்...!

லட்சுமிக்கு சரசுவதி விலைபோவது
இங்கு மட்டுமே...

நாட்டை விற்ற அரசியல்வாதி
பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்
என்று சொல்ல...
இன்னும் கைத்தட்டல் வழுத்தது கூட்டத்தில்...

-வான்போல் வண்ணம்கொண்டான்.

No comments:

Post a Comment