தொட்டுவிட்டு உணர்ந்த காதலை
விட்டுச்செல்ல நீ நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
அணைத்து நின்ற தருணத்தை
அணைத்துவிட எத்தனித்தால்
எங்கேயோ போகுது மனது...
விரல் தீண்டிய நேரத்தை
விட்டுக்கொடு என்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
இதயத்துடிப்பை நீ உணர்ந்த
நிமிடம் மட்டும் போதுமென்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
முத்தமிட்ட ஈரம் இன்னும் இருக்கையில்
முடிந்துவிட்டது அனைத்தும் என்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
தனிமையே துணை என்று
நீ கூறும்பொழுது
அதை நான் நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
எங்கே என்று சென்று பார்த்தால்
என் பெயரில் சவக்குழி ஒன்று
எனக்காக காத்திருக்கிறது.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
No comments:
Post a Comment