Thursday, 8 March 2012

அவர்களுக்கு ஒரு வாழ்த்து




அன்பு நிறைந்த சுற்றம் அவர்கள்...
ஆறுதல் தரும் ஆலமர நிழல் அவர்கள்...
இசை இச்சை இளகிய மனம் மட்டுமல்லாது
இம்சைக்கும் பெயர் அவர்கள் ...
ஈகையின் விளை நிலம் அவர்கள்...
உலகத்தின் உருவாக்கம் அவர்கள்...
ஊசலாடும் மனதிற்கு தெளிவு தரும் மென்கயிறு அவர்கள்...
என்றும் மாறாத தாய்மை கொண்டவர்கள் அவர்கள்...
ஏது பிழை செய்தாலும் இருப்பினும்
மன்னித்தருளும் மனம்கொண்டவர்கள் அவர்கள்...
ஐம்புலனும் ஆளும் ஆளுமை கொண்டவர்கள் அவர்கள்...
ஒப்பில்லாத காதல் கற்பனைகளுக்கு காரணிகள் அவர்கள்...
ஓடம் செல்லும் போதும் தெளிவான நீரோடை அவர்கள்...
ஒளதாரியமாய் கூறப்படுபவர்கள் அவர்கள்...
அஃதாகினும் இஃதாகினும் வாழ்க்கை அவர்களுடனே...

No comments:

Post a Comment