அம்மா எங்க காட்டு
தத்தி தத்தி வந்து
முத்தமிட்டுக்கொண்டே இதான்
மம்ம்மா...
அப்பா எங்க சொல்லு?
ஓடிவந்து முதுகு மீது ஏறி
கட்டிக்கொண்டு சொன்னான்
இதுதான் அப்ப்ப்ப்பா...
தாத்தா எங்கடா செல்லம்?
தந்தைக்கு பின்னாடி மறைந்துகொண்டே
அதோ குச்சி வச்சுதுக்காது பாதுங்க...
அதான் தாத்தா...
பாட்டி எங்கடா காணாம்ம்?
இதுதான் என்னோட பாட்டி
என்று சொல்லிக்கொண்டே
அமர்ந்தான் பாட்டி மடிமீது...
ஆமா எங்க செல்லம் புஜ்ஜிக்குட்டி
எங்க என்ற கேள்வியில்
செய்வதறியாது திகைத்து
வேகமாய் நிலைக்கண்ணாடி முன்
சென்று இதோ பாதுங்க...
என்று சொல்லிக்கொண்டே
சிரித்தான் வெகுளியாய்...
-வான்போல் வண்ணகொண்டான்.
No comments:
Post a Comment