அன்று
சற்று புதிய முயற்சி...
இயற்கை தந்த
ஹெலிகாப்டரை புடிக்க ஆசை...
அங்குமிங்கும் அது பறக்க...
அதைப் பிடிக்கும் முயற்சியில்
நான் என்னை மறக்க...
ஓடி வந்த நான்...
குடம் சுமந்து வந்த என்
அக்காளை இடிக்க...
இடறி விழுந்த அவள்...
என்னைத் துரத்த...
கடைசியில்... என்னிடம்
தட்டானும்...
அவள் கையில் நானும் சிக்குண்டோம்..
அதன் வாலில் நூலினைக்
கட்டி விளையாட...அதுவோ பறந்து சென்றது...
சில வருடம் கழித்து...
கையில் அலைபேசியுடன் நான்...
அக்காளும் இல்லை...
விளையாட தட்டானும் இல்லை...
வெறித்துப்பார்த்தேன்...
இந்த அலைபேசி என் தட்டானை
அழித்த கோபத்தில்...
மணி அடித்தது.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
No comments:
Post a Comment