Wednesday 15 August 2012
Saturday 21 July 2012
குப்பை தேசம்
என்ன
செய்வதென்று தெரியாமல் காகங்கள் காலையிலேயே கரையத்தொடங்கிவிட்டன.ஆமாம் இந்தப்பட்டணத்தில் கோழி கூவாது. இங்கு மட்டுமல்ல எந்தப்பட்டணத்திற்கு சென்றாலும் கோழி கொக்கரிக்க மட்டுமே செய்யும். ஆனால் இன்னும் மக்கள் நம்புகிறார்கள் கோழிதான் கூவுகிறதென.ஆனால் பட்டணத்தில் கறிக்கடைகளில் மட்டுமே கொக்கரித்தும் கூவிக்கொண்டும் இருந்தன கோழிகளும் சேவல்களும் .
காகங்கள் கரைந்துகொண்டிருந்தது தானே.ஆமாம். காலை 7 மணியாகிவிட்டதென யாரும் சொல்லாமல் தெரிந்திருந்தது காகங்களுக்கு. மனோ பாட்டி முன்னோர்களுக்கு படைப்பதென கருதி இரண்டு கரண்டி மாவினை இட்டவித்து சுவற்றின் மீது வைத்தாள். காகத்தின் கரைச்சல் முடிந்தது. நகரத்தில் இரைச்சல் ஆரம்பமானது.
சிறிது நேரத்திலேயே யாசகம் கேட்டு வந்தான் சிறுவன் ஒருவன், எதுவுமில்லை என்று சுருக்கங்களை
சுருக்கி கோரமுகம் காட்டினாள்.
சுத்தமான காற்றினை செலவு செய்து அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர் நம் மனித இனத்தினர்.அனைவருக்கும் அவசரமும் பதற்றமும்.இவர்களை சுமந்த
பாவத்துக்கு அசுத்தமாகிக்கொண்டிருந்தது நிலமும்.குருவியின் சத்தம் அழகாய் கேட்டது
அந்த சாலையில்.மரமில்லாத சாலையில் குருவியா?!, ஒரு அலைபேசியில் ரிங்டோனாக ஒலித்தது குருவியின்
குரல். விநாயகப்பெருமான் போல வயிறு வீங்கிய போக்குவரத்துக்காவலர் ஒருவர் யாரோ கோட்டை
தாண்டிவிட்டாரென கப்பம் வசூலித்துக்கொண்டிருந்தார்.
அரசாங்கத்தின் சாராய விற்பனையால் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தான் அங்கொரு சிறுவன். அது அவனின் தகப்பனுக்கு அன்றிரவு ஒரு குவார்ட்டரோ காலையில் கொக்கரித்த ஒரு கோழியாகவோ கிடைக்க உதவி செய்யும்.கண்களில்
பசியும்,இடுப்பில் இந்திய சட்ட அமைப்பில் இருப்பது போல ஆங்காங்கு ஓட்டைகளுடன் கூடிய
ஒரு கால் சட்டையும் அணிந்திருந்தான். கால்சட்டையின் நிறம் பார்த்ததில் அவன் அரசாங்கப்பள்ளியில்
படித்திருக்கவேண்டும், இல்லையேல் அவன் தந்தை துப்புரவுப்பணியாளனாய் இருக்கவேண்டும்
என்று யூகிக்க தோன்றியது.
களைத்துப்போன சிறுவன் அங்கிருந்த
மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்.பக்கத்தில் இங்கே குப்பைகள் கொட்டக்கூடாது
என்று எழுதியதற்கு ஏற்றார்போல் குப்பைகள் குவிந்துகிடந்தது. அதில் தனது மானத்தைக்காத்துக்கொள்ள
எதாவது துணி இருக்குமா எனத்தேடத்தொடங்கினான். அந்த ஓரமாய் நாய் மேய்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தான்
ஒரு வசதி படைத்த வசம்பு. அவனுடைய நாய் மூத்திரம் போவதற்கு தடையாய் இருக்கிறான் இந்த
சிறுவன் என அவனைத்துரத்த, சிறுவனோ அங்கு கிடைத்த ஒரு செய்தித்தாளை எடுத்து மானத்தை
மறைத்து ஓடினான்.செய்தித்தாளில் "இந்தியன் என்பதில் பெருமதில் கொள்வோம்" என பிரதமர்
பேட்டி அளித்திருந்தார்.
-கிட்டு.
Sunday 8 July 2012
ஒரு கடிதம்
அன்புள்ள அம்மாவிற்கும்
அறிவு
தந்த
அப்பாவிற்கும்,
உங்கள்
அன்பு
மகனின்
முத்தங்களும் வணக்கங்களும்.
எப்படி
இருக்கீங்கனு கேட்க
மாட்டேன் நான்.
ஏன்னா
நீங்க
நல்லா
இருப்பீங்கன்னு ஒரு
நம்பிக்கையிலதான் இங்க
என்னோட
நாட்கள்
கழியுது.
அங்க
அடிக்கடி கரன்ட்
கட்
ஆகுதுனு
சொன்னாங்க. இப்போ
இருக்கா?
இங்க
பனிமூட்டம் அதிகமாகவே
தான்
இருக்கும்.ஆனா
கொஞ்ச
நாளா
அப்படி
இல்லை.இங்கயும் வெயில்
வாட்டி
எடுக்குது. பனிமூட்டம்
இருந்தாலும் அதிகமாவே
கரையுது.
அடுத்த
போகிக்கு இன்னும்
நாலஞ்சு
டயர்
வாங்கி
எரிச்சுவிட்டாங்கனா இன்னும்
இங்க
நல்லாவே
உருகும்.
செல்போன்,
ஈ-மெயில்
அது
இதுனு
வந்ததுக்கு அப்புறமும்
நீங்கதான் இந்திய
தபால்துறைக்கு கொஞ்சம்
உதவி
பண்ணலாம்னு சொல்லி
கடுதாசி
எழுதி
அனுப்ப
சொல்றீங்க.அதுனாலதான்
மெனக்கெட்டு எழுதவேண்டியதா
இருக்கு.
நான்
கூட
பரவாயில்ல, என் கூட
இருக்க
ஒரு
சில
தமிழ்
பசங்களுக்கு தமிழ்
பேச
மட்டும்தான் வருமாம்,என்னைய
மாதிரி
தப்புத்தப்பா எழுதக்கூட
தெரியாதாம்.கேட்டா
பள்ளிக்கூடத்துல ஒண்ணாப்பு
படிக்கும்போதே ஹிந்தி
படிக்க
சேர்த்துட்டாங்களாம். இந்தி
தெரியாம
ஒரு
3 மாசம்
எனக்கு
தொல்லையா இருந்துச்சு.
ஆனா
பழகுனதுல இப்போ
கொஞ்சம்
திக்கி
திணறி
பேசுறேன்.
விவசாயம்
எப்படி இருக்கு இப்போ ? தண்ணி வத்திடுச்சுன்னு போர்வெல் போட்டுக்கலாம்னு சொன்னதுக்கு
, இல்ல சொட்டு நீர் பாசனம் போதும் நம்ம வயக்காடுக்குனு சொன்னீங்க. புதுசு புதுசா விவசாயம்
இருக்காம்ப்பா.அதயும் கொஞ்சம் முயற்சி செஞ்சு பாருங்க.அதுக்காக
எதோ தகவல் தர்றதுக்கு நம்பர் இருக்கு.1551. இதுக்கு அடிச்சு கேட்டீங்கனா எதாச்சும்
தகவல் கிடைக்கும். இந்தியிலதான் பேசுவாங்கனு நெனக்குறேன்.
அதுவுமில்லாம
இப்போ விவசாய நிலம் எல்லாம் ரியல் எஸ்டேட் காரனுங்க போட்டி போட்டு வாங்கி விக்குறாங்களாம்.
அத மட்டும் செஞ்சுடாதிங்கப்பா. அம்மா அடிக்கடி சொல்லும் ,
"ஊட்டிவிட்டது
நானா இருந்தாலும், உழுதுபோட்டது உங்கப்பனா இருந்தாலும் , உன் உசுரு இருக்க காரணம் நம்ம
பூமிதான்யா"னு. என்ன கஷ்டம் வந்தாலும் அத மட்டும் விட்டுக்கொடுக்காதீங்க.
எனக்கு இங்க
லீவ் கேட்டுருக்கேன்.கிடைக்குமானு
தெரியல.வெள்ளைக்காரன் கிட்ட இருந்து வாங்குன சுதந்திரத்த இன்னும் காஷ்மீருக்கு மட்டும்
கிடைக்கமுடியாம நாங்க இங்க அல்லாடுறோம். எப்போ பாகிஸ்தான்காரன் வருவான், எப்போ சீனாக்காரன்
வருவான்னு காவக்காத்துட்டு இருக்கோம்.என்னோட ஆசையும்
இதுல கிடைக்குற நிம்மதியும் அந்த கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்து தட்டுறதுல கிடைக்காதுனு
தான் இதுக்கு வந்தேன். பட்டாளத்தான் அப்பன் ஆத்தானு உங்களுக்கும் ஊருக்குள்ள பெருமைதான.
அனுப்பிவிட்ட பணத்த பாதி செலவுக்கும் , விவசாயத்துக்கும் வச்சுட்டு மீதிய இன்சூரன்ஸ்ல
கட்டிக்குங்க.ஏமாத்துற பைனான்ஸ் கிட்ட தேடி போய் குடுக்காதீங்க சொல்லிப்புட்டேன்.
வேற என்ன
இருக்கு சொல்ல, ஆஹ். தேர்தல் வருதுன்னு சொன்னாங்க. யோசிச்சு ஓட்டுப்போடுங்க. காசு எதாச்சும்
குடுத்தாங்கன்னா அதக்கொண்டுபோய் எதாச்சும் உதவி செய்ற ஆஸ்ரமம், காப்பகத்துல குடுத்துடுங்க.அவங்களாச்சும் நல்லா சாப்பிடுவாங்க.
உங்க ஒடம்ப
பாத்துக்குவீங்க.நானும் இங்க
நல்லா இருக்கேன். உங்ககிட்ட
பேசனும்னு ஆசதான்.நீங்கதான்
ஊர்ல குருவிய கொன்ன அந்த போன் வேணாம்னு சொல்லிட்டீங்க.சரி விடுங்க.நேர்லயே பாத்து பேசிக்கலாம்.
என்றும் உங்கள்
அன்புள்ள மகன்,
மேஜர்.தமிழ்மகன். (எ) ராசுக்குட்டி.
என கடிதத்தை
எழுதிவிட்டு "இந்த லெட்டர அப்படியே போஸ்ட் பண்ணிடுங்க" என கார்க்கியிடம்
தந்தான் பிரபா. "மேஜர்.தமிழ்மகன்னு
யாருமே இங்க இல்லையே மேஜர்"
"யாருமில்லாத
எனக்கு அப்பா அம்மாவா இருந்தது அவங்கதான்,தமிழ் வேலை
கிடைக்காத விரக்தியால தீவிரவாதியா மாறிட்டான்.போன வருஷம்
ப்ளாஸ்ட் நடந்தப்போ அவன்னு தெரிஞ்சுதான் சுட்டேன்".
Tuesday 22 May 2012
Sunday 6 May 2012
Friday 4 May 2012
Monday 23 April 2012
என் தட்டான்
Monday 26 March 2012
செல்லங்கள்
அம்மா எங்க காட்டு
தத்தி தத்தி வந்து
முத்தமிட்டுக்கொண்டே இதான்
மம்ம்மா...
அப்பா எங்க சொல்லு?
ஓடிவந்து முதுகு மீது ஏறி
கட்டிக்கொண்டு சொன்னான்
இதுதான் அப்ப்ப்ப்பா...
தாத்தா எங்கடா செல்லம்?
தந்தைக்கு பின்னாடி மறைந்துகொண்டே
அதோ குச்சி வச்சுதுக்காது பாதுங்க...
அதான் தாத்தா...
பாட்டி எங்கடா காணாம்ம்?
இதுதான் என்னோட பாட்டி
என்று சொல்லிக்கொண்டே
அமர்ந்தான் பாட்டி மடிமீது...
ஆமா எங்க செல்லம் புஜ்ஜிக்குட்டி
எங்க என்ற கேள்வியில்
செய்வதறியாது திகைத்து
வேகமாய் நிலைக்கண்ணாடி முன்
சென்று இதோ பாதுங்க...
என்று சொல்லிக்கொண்டே
சிரித்தான் வெகுளியாய்...
-வான்போல் வண்ணகொண்டான்.
தத்தி தத்தி வந்து
முத்தமிட்டுக்கொண்டே இதான்
மம்ம்மா...
அப்பா எங்க சொல்லு?
ஓடிவந்து முதுகு மீது ஏறி
கட்டிக்கொண்டு சொன்னான்
இதுதான் அப்ப்ப்ப்பா...
தாத்தா எங்கடா செல்லம்?
தந்தைக்கு பின்னாடி மறைந்துகொண்டே
அதோ குச்சி வச்சுதுக்காது பாதுங்க...
அதான் தாத்தா...
பாட்டி எங்கடா காணாம்ம்?
இதுதான் என்னோட பாட்டி
என்று சொல்லிக்கொண்டே
அமர்ந்தான் பாட்டி மடிமீது...
ஆமா எங்க செல்லம் புஜ்ஜிக்குட்டி
எங்க என்ற கேள்வியில்
செய்வதறியாது திகைத்து
வேகமாய் நிலைக்கண்ணாடி முன்
சென்று இதோ பாதுங்க...
என்று சொல்லிக்கொண்டே
சிரித்தான் வெகுளியாய்...
-வான்போல் வண்ணகொண்டான்.
Thursday 8 March 2012
அவர்களுக்கு ஒரு வாழ்த்து
அன்பு நிறைந்த சுற்றம் அவர்கள்...
ஆறுதல் தரும் ஆலமர நிழல் அவர்கள்...
இசை இச்சை இளகிய மனம் மட்டுமல்லாது
இம்சைக்கும் பெயர் அவர்கள் ...
ஈகையின் விளை நிலம் அவர்கள்...
உலகத்தின் உருவாக்கம் அவர்கள்...
ஊசலாடும் மனதிற்கு தெளிவு தரும் மென்கயிறு அவர்கள்...
என்றும் மாறாத தாய்மை கொண்டவர்கள் அவர்கள்...
ஏது பிழை செய்தாலும் இருப்பினும்
மன்னித்தருளும் மனம்கொண்டவர்கள் அவர்கள்...
ஐம்புலனும் ஆளும் ஆளுமை கொண்டவர்கள் அவர்கள்...
ஒப்பில்லாத காதல் கற்பனைகளுக்கு காரணிகள் அவர்கள்...
ஓடம் செல்லும் போதும் தெளிவான நீரோடை அவர்கள்...
ஒளதாரியமாய் கூறப்படுபவர்கள் அவர்கள்...
அஃதாகினும் இஃதாகினும் வாழ்க்கை அவர்களுடனே...
Wednesday 7 March 2012
என் ஐவிரல் இடுக்கினில்
உன் நான்கு விரல் சேர்ந்து
பிரியாமல் புணர்வதே காதல்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
உன் நான்கு விரல் சேர்ந்து
பிரியாமல் புணர்வதே காதல்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
Wednesday 29 February 2012
Tuesday 28 February 2012
உனது நிர்வாணமும்
எனது நிர்வாணமும்
உலகத்துக்கு காமம்
உனக்கும் எனக்கும் காதல்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
எனது நிர்வாணமும்
உலகத்துக்கு காமம்
உனக்கும் எனக்கும் காதல்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
Sunday 26 February 2012
Friday 24 February 2012
எங்கே என் இடம்
தொட்டுவிட்டு உணர்ந்த காதலை
விட்டுச்செல்ல நீ நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
அணைத்து நின்ற தருணத்தை
அணைத்துவிட எத்தனித்தால்
எங்கேயோ போகுது மனது...
விரல் தீண்டிய நேரத்தை
விட்டுக்கொடு என்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
இதயத்துடிப்பை நீ உணர்ந்த
நிமிடம் மட்டும் போதுமென்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
முத்தமிட்ட ஈரம் இன்னும் இருக்கையில்
முடிந்துவிட்டது அனைத்தும் என்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
தனிமையே துணை என்று
நீ கூறும்பொழுது
அதை நான் நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
எங்கே என்று சென்று பார்த்தால்
என் பெயரில் சவக்குழி ஒன்று
எனக்காக காத்திருக்கிறது.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
விட்டுச்செல்ல நீ நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
அணைத்து நின்ற தருணத்தை
அணைத்துவிட எத்தனித்தால்
எங்கேயோ போகுது மனது...
விரல் தீண்டிய நேரத்தை
விட்டுக்கொடு என்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
இதயத்துடிப்பை நீ உணர்ந்த
நிமிடம் மட்டும் போதுமென்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
முத்தமிட்ட ஈரம் இன்னும் இருக்கையில்
முடிந்துவிட்டது அனைத்தும் என்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
தனிமையே துணை என்று
நீ கூறும்பொழுது
அதை நான் நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...
எங்கே என்று சென்று பார்த்தால்
என் பெயரில் சவக்குழி ஒன்று
எனக்காக காத்திருக்கிறது.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
Thursday 2 February 2012
நம்பிக்கை
என்றும் உங்களுக்காக காத்திருக்குது
என் முதுகுப்புறம்...
அதை தட்டிக்கொடுப்பதும்...
குத்திக்கிழிப்பதும்...
அவரவர் விருப்பம்.
என் முதுகுப்புறம்...
அதை தட்டிக்கொடுப்பதும்...
குத்திக்கிழிப்பதும்...
அவரவர் விருப்பம்.
Wednesday 1 February 2012
வலிகளின் பிம்பங்கள்.
வலிகளின் பிம்பங்கள்.
பனிக்குட பிளவு
தொப்புள்கொடி அறுப்புடன் ஆரம்பம்...
காதில் குத்தப்பட்டு அழுது
சில காலம் கழித்து மறந்து..
மறைந்துபோனதாய் நினைத்து
தொட்டபோது அங்கிருந்த ஒரு புள்ளி...
பிரம்பால் வாங்கிய அடிக்கு
புட்டத்திலும் உள்ளங்கையிலும்
இருந்த சிவப்பு வரிகள்..
திருடித்தின்ற மிட்டாய்க்கு
தண்டனையாய்
அன்று அம்மா வைத்த சூடு...
அவன் உடல் நலன் கருதி
அன்று அவள் எடுத்த
அக்னிச்சட்டியின் கொப்புளங்கள்..
விட்டுச்சென்ற காதல்
விரலில் இருக்கும் சிகரெட்
கைகளில் ஆங்காங்கு இருந்த சில
தளும்புகள்...
கணவன் இறந்தபின்
உடைக்கப்பட்ட வளையல்கள்
கீறியதால் வழிந்த மணிக்கட்டு ரத்தம்..
அழித்துவிட்ட குங்குமம்
அதன்பின் அறுக்கப்பட்ட தாலி...
கோபத்தில் வெளியான வார்த்தைகள்
அதனால் வழிந்த கண்ணீரின்
சுவடுகள்...
முதுமையில் வரும் மறதி
அதனால் பெற்ற அவமதிப்பு
அதற்குப்பின் விடியாத இரவு...
எரிக்கப்பட்டபின் கிடைத்த சாம்பலும்
அதனால் உண்டான பழைய நினைவுகள்...
ஜனனத்தில் தொடங்கியது இது..
மரணத்திலும் தொடரும்...
வலிகளின் பிம்பங்கள்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
பனிக்குட பிளவு
தொப்புள்கொடி அறுப்புடன் ஆரம்பம்...
காதில் குத்தப்பட்டு அழுது
சில காலம் கழித்து மறந்து..
மறைந்துபோனதாய் நினைத்து
தொட்டபோது அங்கிருந்த ஒரு புள்ளி...
பிரம்பால் வாங்கிய அடிக்கு
புட்டத்திலும் உள்ளங்கையிலும்
இருந்த சிவப்பு வரிகள்..
திருடித்தின்ற மிட்டாய்க்கு
தண்டனையாய்
அன்று அம்மா வைத்த சூடு...
அவன் உடல் நலன் கருதி
அன்று அவள் எடுத்த
அக்னிச்சட்டியின் கொப்புளங்கள்..
விட்டுச்சென்ற காதல்
விரலில் இருக்கும் சிகரெட்
கைகளில் ஆங்காங்கு இருந்த சில
தளும்புகள்...
கணவன் இறந்தபின்
உடைக்கப்பட்ட வளையல்கள்
கீறியதால் வழிந்த மணிக்கட்டு ரத்தம்..
அழித்துவிட்ட குங்குமம்
அதன்பின் அறுக்கப்பட்ட தாலி...
கோபத்தில் வெளியான வார்த்தைகள்
அதனால் வழிந்த கண்ணீரின்
சுவடுகள்...
முதுமையில் வரும் மறதி
அதனால் பெற்ற அவமதிப்பு
அதற்குப்பின் விடியாத இரவு...
எரிக்கப்பட்டபின் கிடைத்த சாம்பலும்
அதனால் உண்டான பழைய நினைவுகள்...
ஜனனத்தில் தொடங்கியது இது..
மரணத்திலும் தொடரும்...
வலிகளின் பிம்பங்கள்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
Wednesday 25 January 2012
இந்தியாவின் விதி
மிளகு திருட கடல் கடந்து
வந்தவனுக்கு வாசல் திறந்து
வாணிகம் என நம்பி அடிமையானோம்...
வளங்கள் அனைத்தையும்
சுரண்டி தந்து கப்பம் கட்டி
கைகட்டி நின்றோம்..
தட்டிக்கேட்டவனுக்கு தூக்கும்
எதிர்த்து நின்றவனுக்கு தோட்டாக்களும்
பரிசாய் வாங்கினோம்...
விடுதலை வேண்டி காத்துக் கிடந்து...
கிடைத்தது ஒரு நாள்...
சட்டம் இயற்றி குடியரசானோம்...
காலமும் கடந்தது...
வேதங்கள் எழுதிய நாட்டில் இன்று
தீவிரவாதம் பயங்கரவாதம்
என்று வாதங்கள் செய்துகொண்டிருக்கிறோம்...
கடல் கடந்து கொடி நாட்டினோம்...
இன்றோ
கடல் கடந்து அகதிகளாய் குடியேறுகிறோம்...
ஆறறிவு கொண்ட ஆட்டு மந்தைகளாய்...
மதத்துக்கு ஒரு விதி..
பணத்துக்கு தரும் நீதி...
ஊருக்கு ஒரு சாதி சங்கம்...
இது ஒற்றுமை மிகுந்த நாடாம்...!
லட்சுமிக்கு சரசுவதி விலைபோவது
இங்கு மட்டுமே...
நாட்டை விற்ற அரசியல்வாதி
பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்
என்று சொல்ல...
இன்னும் கைத்தட்டல் வழுத்தது கூட்டத்தில்...
-வான்போல் வண்ணம்கொண்டான்.
வந்தவனுக்கு வாசல் திறந்து
வாணிகம் என நம்பி அடிமையானோம்...
வளங்கள் அனைத்தையும்
சுரண்டி தந்து கப்பம் கட்டி
கைகட்டி நின்றோம்..
தட்டிக்கேட்டவனுக்கு தூக்கும்
எதிர்த்து நின்றவனுக்கு தோட்டாக்களும்
பரிசாய் வாங்கினோம்...
விடுதலை வேண்டி காத்துக் கிடந்து...
கிடைத்தது ஒரு நாள்...
சட்டம் இயற்றி குடியரசானோம்...
காலமும் கடந்தது...
வேதங்கள் எழுதிய நாட்டில் இன்று
தீவிரவாதம் பயங்கரவாதம்
என்று வாதங்கள் செய்துகொண்டிருக்கிறோம்...
கடல் கடந்து கொடி நாட்டினோம்...
இன்றோ
கடல் கடந்து அகதிகளாய் குடியேறுகிறோம்...
ஆறறிவு கொண்ட ஆட்டு மந்தைகளாய்...
மதத்துக்கு ஒரு விதி..
பணத்துக்கு தரும் நீதி...
ஊருக்கு ஒரு சாதி சங்கம்...
இது ஒற்றுமை மிகுந்த நாடாம்...!
லட்சுமிக்கு சரசுவதி விலைபோவது
இங்கு மட்டுமே...
நாட்டை விற்ற அரசியல்வாதி
பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்
என்று சொல்ல...
இன்னும் கைத்தட்டல் வழுத்தது கூட்டத்தில்...
-வான்போல் வண்ணம்கொண்டான்.
Wednesday 18 January 2012
ரயில் பயணங்களில்
ஒரு தங்கைக்கு தோள் தந்து
ஒரு அண்ணன் அங்கு தாயாகிறான்...
நண்பனின் தோள் மட்டுமல்ல
மடியும் இருக்கிறது உறங்க
என உறங்குகிறான் நண்பன் ஒருவன்...
அங்கங்கு அமர்ந்திருந்த காதலர்களில்
காதலனின் மார்பினில் காதலிகள்
தஞ்சம் புகுந்தனர்...
அங்கு அந்த காதலன் தாயாகிறான்.
கட்டப்பட்ட தூளியில்
குழந்தை அழுதிருக்க...
அவளுக்கோ தாலாட்டத் தெரியவில்லை
இருப்பினும் உறங்குது குழந்தை...
அனுமதிக்கப்பட்ட சிலருக்கு
தனிமையும் அதற்கு துணையாய்
கேசம் கோதிய காற்றும்
அதனுடன் தாயாக
அனைவரும் உறங்கினோம்
தண்டவாளத்தின்
தடக் தடக் தாலாட்டில்.
ஒரு அண்ணன் அங்கு தாயாகிறான்...
நண்பனின் தோள் மட்டுமல்ல
மடியும் இருக்கிறது உறங்க
என உறங்குகிறான் நண்பன் ஒருவன்...
அங்கங்கு அமர்ந்திருந்த காதலர்களில்
காதலனின் மார்பினில் காதலிகள்
தஞ்சம் புகுந்தனர்...
அங்கு அந்த காதலன் தாயாகிறான்.
கட்டப்பட்ட தூளியில்
குழந்தை அழுதிருக்க...
அவளுக்கோ தாலாட்டத் தெரியவில்லை
இருப்பினும் உறங்குது குழந்தை...
அனுமதிக்கப்பட்ட சிலருக்கு
தனிமையும் அதற்கு துணையாய்
கேசம் கோதிய காற்றும்
அதனுடன் தாயாக
அனைவரும் உறங்கினோம்
தண்டவாளத்தின்
தடக் தடக் தாலாட்டில்.
Wednesday 11 January 2012
1% மனிதம்
மதிய வேளை தொடங்குது.வெயிலுக்கு ஜோடியாய் அவன் நிழலும் சேர்ந்துகொள்ள நடக்கிறான் வேகமாய்.அடிக்கின்ற அனலுக்கு மட்டுமே தெரியும் அவன் கோபமும் அதுபோலவே உள்ளதென.
என்னதான் செய்வது,அவனுக்கு காதல்.வேலை தேடும் படலத்தில் நடக்க ஆரம்பித்த காலத்தில், அந்த கால்கள் அயர்ந்திருந்த பொழுது தட்டுப்பட்ட ஒரே ஒரு ஆறுதல் இவன் காதல்.அதுவும் அந்தக் காலத்திலேயே பூத்ததுதான்.
முதல் சந்திப்பு அவளுக்கும் அவனுக்கும் அந்த நேர்காணலில் தான்.இவனுக்கும் அவளுக்கும் அடுத்தடுத்த பெயர்கள்.கார்த்திக் கார்த்திகா.அழைப்பு மணி அலறியது அவன் மனக்கேள்விகளுடன்.கார்த்திக் உள் நுழைய காத்திருந்தது கேள்விக்கணைகள்.பழக்கப்பட்ட கேள்விகளும் அவன் பதில்களும் சற்று நிதானமாய் இருந்தது.ஆனால் தடுமாறும் மனதை விட அவன் நாவுக்கு தடுமாற்றம் அளித்தது.
பிறந்த குழந்தை திக்கிக்கொண்டு தமிழ் பேசினால் மழலை அழகு என்னும் மக்கள் , குழந்தை வளர்ந்தபின்பு அப்படிப் பேசினால் திக்குவாய் என்பது கவலைக்குரிய விசயமானது இந்த மனிதம் நிறைந்த உலகில்.
நேர்காணல் முடிந்தது.அடுத்ததாய் கார்த்திகா.இவள் உள் நுழைய அவன் கதவைத் திறக்க ஏமாற்றப் புன்னகையுடன் வாழ்த்தினான் "ஆல் த பெஸ்ட்ட்ட்".புன்னகையுடன் சென்றவள், நன்றிப்புன்னகையுடன் திரும்பினாள்.புரிந்துகொண்டான் கார்த்திக்.புரிய முற்பட்டாள் கார்த்திகா.
நவீன யுகம் தந்த துணையுடன் நட்பானார்கள் இருவரும்.குறுஞ்செய்தியும் மிஸ்டு காலும் பாலம் கட்டியது காதலுக்கு. இவன் திக்கித் திணறி சொல்லிய ஐ லவ் யூ தான் அவளின் புன்னகை மந்திரம்.தினம் இரவு நடைபெறும் அந்தரங்கப் பேச்சுகள் முடிவுக்கு வருவதும் அந்த "ஐ லவ் யூ "வில்தான்.
அவன் கண்ணில் இது அனைத்தும் ஓடிய பொழுது மணி 2 ஆனது.பேருந்துக்கட்டணம் உயர்வும் அவன் பர்சை பதம் பார்த்தது. கால்கள் களைத்துப்போனது.உதவியது ஒரு இதயம்.
அவன் வியர்வை முழுதும் காற்றில் காய்ந்துபோகுது.நன்றி சொல்லிக்கொண்டே இறங்குகிறான்.ஒரு பக்கம் புன்னகையும், மறுபக்கம் கோபங்களும் கேள்விகளுமாய்.
கார்த்திகாவின் அப்பா அமர்ந்திருக்க,கலங்கிய கண்களுடன் அலை பேசியை பார்த்தாள் .அது மேஜையின் மீது இருந்தது.பக்கத்தில் ஜாதகமும் சில மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும்.
நுழைகிறான் கார்த்திக்.வந்தவுடன் கோபப்பார்வைகள் மோதிக்கொள்ள, பதிலேதும் எதிர்பாராமல் கேள்வி கேட்கிறான் "உங்க பொண்ணு கார்ல உட்காந்து இன்னொருத்தன் கூட அழுதுட்டு போகணுமா,இல்ல எ எ எ எ என் கை புடிச்சு சிரிச்சு சந்தோசமா நடக்க்க்க்கணுமா".திக்கித்திணறியது வார்த்தையும் அவன் கோபமும்.
ஒரு நிமிடம் யோசித்த கார்த்திகாவின் அப்பா, எழுந்து வந்து அவன் தோள் தொட்டு,
"உன் குறையாய் காட்டி இவளை நான் உனக்குத்தர முடியாதுனு சொல்லிட்டா , என் மனைவி என்னை ஒதுக்க்க்க்க்க்க்க் க்க்க் க்க் கிவிடுவா" என சொல்லியதும் முகங்கள் மலர்ந்தன.
மலரட்டும் காதல்கள்.
என்னதான் செய்வது,அவனுக்கு காதல்.வேலை தேடும் படலத்தில் நடக்க ஆரம்பித்த காலத்தில், அந்த கால்கள் அயர்ந்திருந்த பொழுது தட்டுப்பட்ட ஒரே ஒரு ஆறுதல் இவன் காதல்.அதுவும் அந்தக் காலத்திலேயே பூத்ததுதான்.
முதல் சந்திப்பு அவளுக்கும் அவனுக்கும் அந்த நேர்காணலில் தான்.இவனுக்கும் அவளுக்கும் அடுத்தடுத்த பெயர்கள்.கார்த்திக் கார்த்திகா.அழைப்பு மணி அலறியது அவன் மனக்கேள்விகளுடன்.கார்த்திக் உள் நுழைய காத்திருந்தது கேள்விக்கணைகள்.பழக்கப்பட்ட கேள்விகளும் அவன் பதில்களும் சற்று நிதானமாய் இருந்தது.ஆனால் தடுமாறும் மனதை விட அவன் நாவுக்கு தடுமாற்றம் அளித்தது.
பிறந்த குழந்தை திக்கிக்கொண்டு தமிழ் பேசினால் மழலை அழகு என்னும் மக்கள் , குழந்தை வளர்ந்தபின்பு அப்படிப் பேசினால் திக்குவாய் என்பது கவலைக்குரிய விசயமானது இந்த மனிதம் நிறைந்த உலகில்.
நேர்காணல் முடிந்தது.அடுத்ததாய் கார்த்திகா.இவள் உள் நுழைய அவன் கதவைத் திறக்க ஏமாற்றப் புன்னகையுடன் வாழ்த்தினான் "ஆல் த பெஸ்ட்ட்ட்".புன்னகையுடன் சென்றவள், நன்றிப்புன்னகையுடன் திரும்பினாள்.புரிந்துகொண்டான் கார்த்திக்.புரிய முற்பட்டாள் கார்த்திகா.
நவீன யுகம் தந்த துணையுடன் நட்பானார்கள் இருவரும்.குறுஞ்செய்தியும் மிஸ்டு காலும் பாலம் கட்டியது காதலுக்கு. இவன் திக்கித் திணறி சொல்லிய ஐ லவ் யூ தான் அவளின் புன்னகை மந்திரம்.தினம் இரவு நடைபெறும் அந்தரங்கப் பேச்சுகள் முடிவுக்கு வருவதும் அந்த "ஐ லவ் யூ "வில்தான்.
அவன் கண்ணில் இது அனைத்தும் ஓடிய பொழுது மணி 2 ஆனது.பேருந்துக்கட்டணம் உயர்வும் அவன் பர்சை பதம் பார்த்தது. கால்கள் களைத்துப்போனது.உதவியது ஒரு இதயம்.
அவன் வியர்வை முழுதும் காற்றில் காய்ந்துபோகுது.நன்றி சொல்லிக்கொண்டே இறங்குகிறான்.ஒரு பக்கம் புன்னகையும், மறுபக்கம் கோபங்களும் கேள்விகளுமாய்.
கார்த்திகாவின் அப்பா அமர்ந்திருக்க,கலங்கிய கண்களுடன் அலை பேசியை பார்த்தாள் .அது மேஜையின் மீது இருந்தது.பக்கத்தில் ஜாதகமும் சில மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும்.
நுழைகிறான் கார்த்திக்.வந்தவுடன் கோபப்பார்வைகள் மோதிக்கொள்ள, பதிலேதும் எதிர்பாராமல் கேள்வி கேட்கிறான் "உங்க பொண்ணு கார்ல உட்காந்து இன்னொருத்தன் கூட அழுதுட்டு போகணுமா,இல்ல எ எ எ எ என் கை புடிச்சு சிரிச்சு சந்தோசமா நடக்க்க்க்கணுமா".திக்கித்திணறியது வார்த்தையும் அவன் கோபமும்.
ஒரு நிமிடம் யோசித்த கார்த்திகாவின் அப்பா, எழுந்து வந்து அவன் தோள் தொட்டு,
"உன் குறையாய் காட்டி இவளை நான் உனக்குத்தர முடியாதுனு சொல்லிட்டா , என் மனைவி என்னை ஒதுக்க்க்க்க்க்க்க் க்க்க் க்க் கிவிடுவா" என சொல்லியதும் முகங்கள் மலர்ந்தன.
மலரட்டும் காதல்கள்.
வேற்றுமை
வெள்ளிச்சங்கில் வெண்ணிறத்தில்
பால் நிறைந்து
பட்டுச்சேலையில் அம்மா நிற்கிறாள்...
வேண்டாம் வேண்டாம் என அடம்பிடிக்க
அள்ளிவைத்து ஊட்டுகிறாள்..
ஒரு பங்கு உள்செல்ல...
ஒன்பது பங்கு உதட்டுவழி வழியுது..
ஒட்டிய வயிறும்...
காய்ந்து கருத்த உதடும்...
வறண்டு போன அந்த சிறிய நாக்கும்...
கிழிந்துபோன கந்தையும்
சாராயத்தில் மூழ்கிப்போன தந்தையும்..
பாத்திரம் தேய்க்கப்போன அன்னையும்..
நாயாய் பிறந்திருந்தாலும் எதாவது
கிடைத்திருக்குமோ என அவள் ஒருபுறம் எண்ண..
இதை இரண்டையும்
வேடிக்கை பார்த்தபடி
காத்துக்கொண்டிருந்தாள்
பட்ஜெட் போட்டு அவளின் அன்னை
வாங்கிவரும் பாக்கெட் பாலுக்கு....
பால் நிறைந்து
பட்டுச்சேலையில் அம்மா நிற்கிறாள்...
வேண்டாம் வேண்டாம் என அடம்பிடிக்க
அள்ளிவைத்து ஊட்டுகிறாள்..
ஒரு பங்கு உள்செல்ல...
ஒன்பது பங்கு உதட்டுவழி வழியுது..
ஒட்டிய வயிறும்...
காய்ந்து கருத்த உதடும்...
வறண்டு போன அந்த சிறிய நாக்கும்...
கிழிந்துபோன கந்தையும்
சாராயத்தில் மூழ்கிப்போன தந்தையும்..
பாத்திரம் தேய்க்கப்போன அன்னையும்..
நாயாய் பிறந்திருந்தாலும் எதாவது
கிடைத்திருக்குமோ என அவள் ஒருபுறம் எண்ண..
இதை இரண்டையும்
வேடிக்கை பார்த்தபடி
காத்துக்கொண்டிருந்தாள்
பட்ஜெட் போட்டு அவளின் அன்னை
வாங்கிவரும் பாக்கெட் பாலுக்கு....
Subscribe to:
Posts (Atom)