உன்னால் முடியாமல் போனாலும்
நீ பிறருக்கு பரிசளிக்கு முடியும்
அதன் பெயர் புன்னகை.
-வான்போல் வண்ணம்கொண்டான்.
Wednesday 28 December 2011
Monday 26 December 2011
வேற்றுமை
வெள்ளிச்சங்கில் வெண்ணிறத்தில்
பால் நிறைந்து
பட்டுச்சேலையில் அம்மா நிற்கிறாள்...
வேண்டாம் வேண்டாம் என அடம்பிடிக்க
அள்ளிவைத்து ஊட்டுகிறாள்..
ஒரு பங்கு உள்செல்ல...
ஒன்பது பங்கு உதட்டுவழி வழியுது..
ஒட்டிய வயிறும்...
காய்ந்து கருத்த உதடும்...
வறண்டு போன அந்த சிறிய நாக்கும்...
கிழிந்துபோன கந்தையும்
சாராயத்தில் மூழ்கிப்போன தந்தையும்..
பாத்திரம் தேய்க்கப்போன அன்னையும்..
நாயாய் பிறந்திருந்தாலும் எதாவது
கிடைத்திருக்குமோ என அவள் ஒருபுறம் எண்ண..
இதை இரண்டையும்
வேடிக்கை பார்த்தபடி
காத்துக்கொண்டிருந்தாள்
பட்ஜெட் போட்டு அவளின் அன்னை
வாங்கிவரும் பாக்கெட் பாலுக்கு....
பால் நிறைந்து
பட்டுச்சேலையில் அம்மா நிற்கிறாள்...
வேண்டாம் வேண்டாம் என அடம்பிடிக்க
அள்ளிவைத்து ஊட்டுகிறாள்..
ஒரு பங்கு உள்செல்ல...
ஒன்பது பங்கு உதட்டுவழி வழியுது..
ஒட்டிய வயிறும்...
காய்ந்து கருத்த உதடும்...
வறண்டு போன அந்த சிறிய நாக்கும்...
கிழிந்துபோன கந்தையும்
சாராயத்தில் மூழ்கிப்போன தந்தையும்..
பாத்திரம் தேய்க்கப்போன அன்னையும்..
நாயாய் பிறந்திருந்தாலும் எதாவது
கிடைத்திருக்குமோ என அவள் ஒருபுறம் எண்ண..
இதை இரண்டையும்
வேடிக்கை பார்த்தபடி
காத்துக்கொண்டிருந்தாள்
பட்ஜெட் போட்டு அவளின் அன்னை
வாங்கிவரும் பாக்கெட் பாலுக்கு....
Sunday 25 December 2011
என்னடா இவன் கிறுக்கிட்டு இருந்தவன் பொறுப்பா என்னமோ எழுத ஆரம்பிக்குறானு பார்க்குறீங்களா! என்ன செய்ய, என்னால் முடிந்த ஒரு சில தகவல்களை தோழமைகளுக்கு எடுத்துக்கூற வேண்டாமா?
நான் விசயத்துக்கு வருகிறேன். கிழக்கிந்திய கம்பெனி என்பது நம் வரலாற்றுப்பாடங்களின் மூலம் நாம் அறிந்ததே. வாணிபம் செய்ய வருகிறோம் என கதவைத்தட்டியவர்கள் கால் பதித்த, நாம் ஆண்ட மண்ணிலேயே நம்மை அடிமையாக்கி பாடுபட்டு பெற்ற சுதந்திரமும்(!!!) அதன் வரலாறும் படித்து அதை பழைய பொருள் விற்கும் கடையில் போட்டு ஒரு ப்ளாஸ்டிக் குடமோ, பஜ்ஜி சொஜ்ஜியோ வாங்கி சாப்பிட்டு முடித்துவிட்டோம்.
என் கேள்வி இதுதான். இப்பொழுது மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.வேலை செய்வது இந்தியாவில் . விலை போவது வெளிநாட்டில்.
வாஸ்கோடகாமாதான் இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்தான் என்று கண்மூடித்தனமாய் நம்ப வைத்த கல்வி அதன்பின் அவன் செய்த செயல்களை மறைத்ததேனோ. இதையும் ஒரு கலை சார்ந்த ஒருவன் சொல்லி தெரிந்துகொண்டேன் "உருமி" என்ற ஒரு மலையாளப்படத்தின் மூலம்.
ஆள்வது இந்தியன் .
ஆட்டுவிப்பது அமெரிக்கனும் மற்றவனும்.
வாழ்வதும் வளர்வதும் அவர்கள்.
வளர்ச்சி என்ற வார்த்தையை மட்டுமே
படித்துக்கொள்ளுது நம் உதடுகள்.
எப்படியெல்லாம் நம் அரசு அவனுக்கு பந்தி வைக்கிறது, யாரெல்லாம் விருந்து சாப்பிடுகிறார்கள் என்பது இனி வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு சொல்லிவிடுகிறேன்.உங்கள் கருத்துக்களும் எண்ணங்களும் தேவை.
அதற்கு முன்பு இந்தியாவை ஏன் அவர்கள் தேர்ந்தெடுத்தனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா?
தெரிந்துகொள்வோமே.
இந்தியா - வணிகரீதியான சில தகவல்கள்.
உலகின் இரண்டாம் மிகப்பெரும் சந்தை.
தனக்கென உயர்ரக தொழில்நுட்ப "சூப்பர் கம்ப்யூட்டர்" உருவாக்கும் 3 நாடுகளில் ஒன்று.
தனக்கென செயற்கைக்கோள் அனுப்பும் 6 நாடுகளில் ஒன்று.
500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டது.
அமெரிக்காவிற்க்குப்பின் உலகில் அதிகமான மென்பொருள் நிறுவனங்கள் கொண்டது.
மும்பை பங்குச்சந்தையில் மட்டும் 6500க்கும் மேற்பட்ட வணிகங்களைக் கொண்டது.
பால் உற்பத்தியில் உலகில் முதல் இடமும் , உணவு , காய்கறி , பழங்கள் உற்பத்தியில் இரண்டாம் இடம்.
உலகப்பொருளாதாரத்தில் மிக முக்கியமான நாடு, வருடம் 8 சதவீத உயர்வு அடையும் நாடு.
கொள்முதல் செய்வதில் உலகில் 4வது மிகப்பெரும் பொருளாதார நாடு.
வருடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பும் நாடு.
மருந்துகள் சந்தையிலும் , உற்பத்தியிலும் இரண்டாம் மிகப்பெரும் நாடு.
( சீனா முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது ).
40 லட்சத்திற்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்கள் கொண்ட பொருளாதாரத்தில் முன்னேறும் நாடு.
ஆங்கிலம் பேசுவதில் திறமைமிக்க மக்களைக்கொண்ட நாடு,அதில் இரண்டாம் இடம் பெற்றதுடன் அதிகமான அறிவுத்தகவல் முறைவழி()ல் முன்னேறும் நாடு.
வருடத்திற்கு 1000 திரைப்படங்கள் தயாரிக்கும் நாடு.(அமெரிக்காவை விட அதிகம்).
ரூபாயின் மதிப்பு குறைந்ததாலும், ஆங்கிலப்புலமை அதிகம் பெற்றதாலும் தகவல் மையங்கள்() அதிகம் கொண்ட நாடு.
வரி விலக்குகள் அதிகம் தரும் நாடு.குறிப்பாக வெளிநாட்டு வியாபாரிகளுக்கு.
உலகில் அதிகம் விற்பனை ஆவதும்,அதிகமாக முதலீடு செய்யும் சந்தையாக இந்தியா உள்ளது.
நான் விசயத்துக்கு வருகிறேன். கிழக்கிந்திய கம்பெனி என்பது நம் வரலாற்றுப்பாடங்களின் மூலம் நாம் அறிந்ததே. வாணிபம் செய்ய வருகிறோம் என கதவைத்தட்டியவர்கள் கால் பதித்த, நாம் ஆண்ட மண்ணிலேயே நம்மை அடிமையாக்கி பாடுபட்டு பெற்ற சுதந்திரமும்(!!!) அதன் வரலாறும் படித்து அதை பழைய பொருள் விற்கும் கடையில் போட்டு ஒரு ப்ளாஸ்டிக் குடமோ, பஜ்ஜி சொஜ்ஜியோ வாங்கி சாப்பிட்டு முடித்துவிட்டோம்.
என் கேள்வி இதுதான். இப்பொழுது மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.வேலை செய்வது இந்தியாவில் . விலை போவது வெளிநாட்டில்.
வாஸ்கோடகாமாதான் இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்தான் என்று கண்மூடித்தனமாய் நம்ப வைத்த கல்வி அதன்பின் அவன் செய்த செயல்களை மறைத்ததேனோ. இதையும் ஒரு கலை சார்ந்த ஒருவன் சொல்லி தெரிந்துகொண்டேன் "உருமி" என்ற ஒரு மலையாளப்படத்தின் மூலம்.
ஆள்வது இந்தியன் .
ஆட்டுவிப்பது அமெரிக்கனும் மற்றவனும்.
வாழ்வதும் வளர்வதும் அவர்கள்.
வளர்ச்சி என்ற வார்த்தையை மட்டுமே
படித்துக்கொள்ளுது நம் உதடுகள்.
எப்படியெல்லாம் நம் அரசு அவனுக்கு பந்தி வைக்கிறது, யாரெல்லாம் விருந்து சாப்பிடுகிறார்கள் என்பது இனி வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு சொல்லிவிடுகிறேன்.உங்கள் கருத்துக்களும் எண்ணங்களும் தேவை.
அதற்கு முன்பு இந்தியாவை ஏன் அவர்கள் தேர்ந்தெடுத்தனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா?
தெரிந்துகொள்வோமே.
இந்தியா - வணிகரீதியான சில தகவல்கள்.
உலகின் இரண்டாம் மிகப்பெரும் சந்தை.
தனக்கென உயர்ரக தொழில்நுட்ப "சூப்பர் கம்ப்யூட்டர்" உருவாக்கும் 3 நாடுகளில் ஒன்று.
தனக்கென செயற்கைக்கோள் அனுப்பும் 6 நாடுகளில் ஒன்று.
500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டது.
அமெரிக்காவிற்க்குப்பின் உலகில் அதிகமான மென்பொருள் நிறுவனங்கள் கொண்டது.
மும்பை பங்குச்சந்தையில் மட்டும் 6500க்கும் மேற்பட்ட வணிகங்களைக் கொண்டது.
பால் உற்பத்தியில் உலகில் முதல் இடமும் , உணவு , காய்கறி , பழங்கள் உற்பத்தியில் இரண்டாம் இடம்.
உலகப்பொருளாதாரத்தில் மிக முக்கியமான நாடு, வருடம் 8 சதவீத உயர்வு அடையும் நாடு.
கொள்முதல் செய்வதில் உலகில் 4வது மிகப்பெரும் பொருளாதார நாடு.
வருடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பும் நாடு.
மருந்துகள் சந்தையிலும் , உற்பத்தியிலும் இரண்டாம் மிகப்பெரும் நாடு.
( சீனா முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது ).
40 லட்சத்திற்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்கள் கொண்ட பொருளாதாரத்தில் முன்னேறும் நாடு.
ஆங்கிலம் பேசுவதில் திறமைமிக்க மக்களைக்கொண்ட நாடு,அதில் இரண்டாம் இடம் பெற்றதுடன் அதிகமான அறிவுத்தகவல் முறைவழி()ல் முன்னேறும் நாடு.
வருடத்திற்கு 1000 திரைப்படங்கள் தயாரிக்கும் நாடு.(அமெரிக்காவை விட அதிகம்).
ரூபாயின் மதிப்பு குறைந்ததாலும், ஆங்கிலப்புலமை அதிகம் பெற்றதாலும் தகவல் மையங்கள்() அதிகம் கொண்ட நாடு.
வரி விலக்குகள் அதிகம் தரும் நாடு.குறிப்பாக வெளிநாட்டு வியாபாரிகளுக்கு.
உலகில் அதிகம் விற்பனை ஆவதும்,அதிகமாக முதலீடு செய்யும் சந்தையாக இந்தியா உள்ளது.
Friday 25 November 2011
இது நம்ம பாட்டு மச்சி
கண்ணப் பாத்தா உன்னப் பார்ப்பா
நீயும் பாத்தா திரும்பி பார்ப்பா
பாவம் நம்ம பசங்க தான்பா
இந்த நெலம எங்களுக்கு ஏன்பா?
பஸ் ஸ்டாண்டு ஓரம் வந்தா
முடிய ஒதுக்கி நிப்பா லந்தா
கையில் ரோசாப்பூவ நீயும் தந்தா
உன்னோட லைஃப்போ
கோ கோ கோ கோவிந்தா!
நைட்டு புல்லா பேசனும் மாமா
காலையில் குட் மார்னிங் சொல்லணும் மாமா
பர்சு ஃபுல்லா இருக்கணும் மாமா
இல்லாக்காட்டி அம்போதான் மாமா!
வாரக்கடைசி பீச்சுல மீட்டிங்
மாசத்துக்கு ஒரு டேட்டிங்
100 மெசேஜும் விடாம சேட்டிங்
கடசில அடிக்கும் மணிதான்
ஊஊஊஊஊ டிங் டிங்...(கண்ணப் பாத்தா உன்னப் பார்ப்பா)
மிஸ் யூ நீயும் சொல்ல வேணும்
மிஸ்டு காலும் குடுக்க வேணும்
அசைன்மெண்டும் எழுத வேணும்
அரியர் நீயும் வைக்க வேணும்
பர்த்டேக்கு க்ரீட்டிங் கார்டு
பேலன்ஸ் போன ரீசார்ஜ் போடு
கேப்விடாம கடலையப்போடு
மூணு முடிச்சு கடைசியில் போடு
இல்லாக்காட்டி இல்லாக்காட்டி..
அடுத்த பிகருக்கு ரூட்டப்போடு..
(கண்ணப் பாத்தா உன்னப் பார்ப்பா)
நீயும் பாத்தா திரும்பி பார்ப்பா
பாவம் நம்ம பசங்க தான்பா
இந்த நெலம எங்களுக்கு ஏன்பா?
பஸ் ஸ்டாண்டு ஓரம் வந்தா
முடிய ஒதுக்கி நிப்பா லந்தா
கையில் ரோசாப்பூவ நீயும் தந்தா
உன்னோட லைஃப்போ
கோ கோ கோ கோவிந்தா!
நைட்டு புல்லா பேசனும் மாமா
காலையில் குட் மார்னிங் சொல்லணும் மாமா
பர்சு ஃபுல்லா இருக்கணும் மாமா
இல்லாக்காட்டி அம்போதான் மாமா!
வாரக்கடைசி பீச்சுல மீட்டிங்
மாசத்துக்கு ஒரு டேட்டிங்
100 மெசேஜும் விடாம சேட்டிங்
கடசில அடிக்கும் மணிதான்
ஊஊஊஊஊ டிங் டிங்...(கண்ணப் பாத்தா உன்னப் பார்ப்பா)
மிஸ் யூ நீயும் சொல்ல வேணும்
மிஸ்டு காலும் குடுக்க வேணும்
அசைன்மெண்டும் எழுத வேணும்
அரியர் நீயும் வைக்க வேணும்
பர்த்டேக்கு க்ரீட்டிங் கார்டு
பேலன்ஸ் போன ரீசார்ஜ் போடு
கேப்விடாம கடலையப்போடு
மூணு முடிச்சு கடைசியில் போடு
இல்லாக்காட்டி இல்லாக்காட்டி..
அடுத்த பிகருக்கு ரூட்டப்போடு..
(கண்ணப் பாத்தா உன்னப் பார்ப்பா)
Wednesday 23 November 2011
அக்னி சாட்சி
வீதிமுழுதும் வண்ணத் தோரணங்களும்
விளம்பரப்பலகையில் உன் முகமும்
பச்சை மாவிலைத் தோரணமும்
பக்கத்தில் சாய்ந்திருந்த வாழைமரமும்...
பத்து வீட்டுக்குள் சந்தோசக் கூச்சலும்
பக்கத்து ஊருக்கும் கேட்கும் ஒலிபெருக்கியும்
பேருந்து நிறுத்தங்களில் சொந்தங்களும்...
நேற்றுத்தடவிய சந்தனமும்
அதற்குத் துணையாய் ரத்தச்சந்தனமும்...
பல பந்தி செல்லும் உறவுகளும்
உன் அப்பன் பெருமை பேசும் மக்களும
நடந்துமுடிந்த சடங்குகளும்
இனி நடக்கப்போகும் சடங்குகளும்...
லட்சம் லட்சமாய் வரதட்சணையும்
லட்சணமான சிரிப்புடன் என் தங்கமும்...
அடித்துச்சொல்லுதடி இந்த உலகிற்கு
மகிழ்வாய் நடக்கும் உன் திருமணத்தை...
காத்திருந்த முட்டாளும்
அக்கினிக் குண்டத்தில் கிடப்பானடி
அரைப்படி சாம்பலாய்....
சுற்றி வா மூன்று முறை,
வந்துவிட்டு உறுதிசெய்துகொள்
என்னை தலைமுழுகிவிட்டாயென
என் இன்னுயிர்த்தோழியே....
விளம்பரப்பலகையில் உன் முகமும்
பச்சை மாவிலைத் தோரணமும்
பக்கத்தில் சாய்ந்திருந்த வாழைமரமும்...
பத்து வீட்டுக்குள் சந்தோசக் கூச்சலும்
பக்கத்து ஊருக்கும் கேட்கும் ஒலிபெருக்கியும்
பேருந்து நிறுத்தங்களில் சொந்தங்களும்...
நேற்றுத்தடவிய சந்தனமும்
அதற்குத் துணையாய் ரத்தச்சந்தனமும்...
பல பந்தி செல்லும் உறவுகளும்
உன் அப்பன் பெருமை பேசும் மக்களும
நடந்துமுடிந்த சடங்குகளும்
இனி நடக்கப்போகும் சடங்குகளும்...
லட்சம் லட்சமாய் வரதட்சணையும்
லட்சணமான சிரிப்புடன் என் தங்கமும்...
அடித்துச்சொல்லுதடி இந்த உலகிற்கு
மகிழ்வாய் நடக்கும் உன் திருமணத்தை...
காத்திருந்த முட்டாளும்
அக்கினிக் குண்டத்தில் கிடப்பானடி
அரைப்படி சாம்பலாய்....
சுற்றி வா மூன்று முறை,
வந்துவிட்டு உறுதிசெய்துகொள்
என்னை தலைமுழுகிவிட்டாயென
என் இன்னுயிர்த்தோழியே....
Saturday 19 November 2011
நடைபாதைப் பிணங்கள்
காதலுக்கு இரையான சிலர்
காமத்துக்கு இரையான சிலர்
காசுக்கு இரையான சிலர்
துன்பத்திற்கு இரையான சிலர்
இன்பத்துக்கு இரையான சிலர்
துறவுக்கு இரையான சிலர்
களவுக்கு இரையான சிலர்
கள்ளத்தொடர்புக்கு இரையான சிலர்
வெற்றி தோல்விக்கு இரையான சிலர்
வாழ்க்கையை வெறுத்த சிலர்
கள்ளுக்கு இரையாகி
கண்ணெதிரே வீதியோரத்தில்
கேட்பாரற்றுக் கிடக்கின்றனர்
நடைபாதைப் பிணங்களாய்...
காமத்துக்கு இரையான சிலர்
காசுக்கு இரையான சிலர்
துன்பத்திற்கு இரையான சிலர்
இன்பத்துக்கு இரையான சிலர்
துறவுக்கு இரையான சிலர்
களவுக்கு இரையான சிலர்
கள்ளத்தொடர்புக்கு இரையான சிலர்
வெற்றி தோல்விக்கு இரையான சிலர்
வாழ்க்கையை வெறுத்த சிலர்
கள்ளுக்கு இரையாகி
கண்ணெதிரே வீதியோரத்தில்
கேட்பாரற்றுக் கிடக்கின்றனர்
நடைபாதைப் பிணங்களாய்...
ஒரு வரிக்கூத்து-2
சில நிமிட நடைபயணமே என் வாழ்க்கையாய் தெரிகிறது-அவளுடன் ஒரு நடைபயணம்.
மரத்துப்போன கண்கள் மறந்துபோன தூக்கம் மாற்றமில்லா இரவு.
அவளிடம் விடைபெற்ற முத்தம் என்னிடம் சிறைப்பட்டது.
எரிந்து சாம்பலான கணவன் குடியேறினான் மனைவியின் நெற்றியில் திருநீராய்...
இதயங்களின் அழுகுரல் மொத்தமாய் ஒலிக்கிறது கெட்டி மேளத்தில்-கட்டாயக் கல்யாணம்
துளைகளற்ற புல்லாங்குழலாகிப...
மரத்துப்போன கண்கள் மறந்துபோன தூக்கம் மாற்றமில்லா இரவு.
அவளிடம் விடைபெற்ற முத்தம் என்னிடம் சிறைப்பட்டது.
எரிந்து சாம்பலான கணவன் குடியேறினான் மனைவியின் நெற்றியில் திருநீராய்...
இதயங்களின் அழுகுரல் மொத்தமாய் ஒலிக்கிறது கெட்டி மேளத்தில்-கட்டாயக் கல்யாணம்
துளைகளற்ற புல்லாங்குழலாகிப...
Saturday 12 November 2011
ஒரு வரிக்கூத்துகள்-1
புகைந்தோ புதைந்தோ போகிறவன் வாயிலும் புகை-சிகரெட்...
நீர் அருந்துகிறேன் அளவுக்கு அதிகமாய் அழுவதற்கு...
உனக்கு முத்துப்பற்கள்தான்..அதற்காக பேசக்கூடவா மாட்டாய்-திமிர்க்காரி...
விபத்தில் அடிப்பட்ட குழந்தை இறந்தபின் வாகனத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் இறைவன் நிழற்படமாய்...
முடியப்போகும் வாழ்க்கை வெட்டிவிட்டே ஆரம்பிக்கிறது தொப்புள்கொடியில்...
இமையாய் உன் இதழும் விழியாய் என் இதழும்...
சிறைக்குப் பின் பூங்காற்றாய் ஜன்னலுக்குப்பின் அவள்...
தோல்வியை நீ மறுத்தால்,வெற்றி உன்னை மறுத்துவிடும்...
"ம்ம்ம்" உன்னால் பிடித்துப்போன புதிய தமிழ்ச்சொல்.
தனக்கும் பூட்டு உண்டியலுக்கும் பூட்டு,ஊரைக்காக்குமாம் சாமி...
உனக்கும் உரிமையில்லை காரணம் இது என் காதல்.
முதுகில் புத்தகம் மூளையில் அவள்-பள்ளிப்பருவக்காதல்.
மதம் பரப்புவனிடம் சென்று கேட்க வேண்டிய ஒரு கேள்வி...என்று நீ மனிதத்தை பரப்புவாய்?
நீர் அருந்துகிறேன் அளவுக்கு அதிகமாய் அழுவதற்கு...
உனக்கு முத்துப்பற்கள்தான்..அதற்காக பேசக்கூடவா மாட்டாய்-திமிர்க்காரி...
விபத்தில் அடிப்பட்ட குழந்தை இறந்தபின் வாகனத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் இறைவன் நிழற்படமாய்...
முடியப்போகும் வாழ்க்கை வெட்டிவிட்டே ஆரம்பிக்கிறது தொப்புள்கொடியில்...
இமையாய் உன் இதழும் விழியாய் என் இதழும்...
சிறைக்குப் பின் பூங்காற்றாய் ஜன்னலுக்குப்பின் அவள்...
தோல்வியை நீ மறுத்தால்,வெற்றி உன்னை மறுத்துவிடும்...
"ம்ம்ம்" உன்னால் பிடித்துப்போன புதிய தமிழ்ச்சொல்.
தனக்கும் பூட்டு உண்டியலுக்கும் பூட்டு,ஊரைக்காக்குமாம் சாமி...
உனக்கும் உரிமையில்லை காரணம் இது என் காதல்.
முதுகில் புத்தகம் மூளையில் அவள்-பள்ளிப்பருவக்காதல்.
மதம் பரப்புவனிடம் சென்று கேட்க வேண்டிய ஒரு கேள்வி...என்று நீ மனிதத்தை பரப்புவாய்?
Wednesday 9 November 2011
உடலெங்கும் உன் முத்தம்
வெட்டவெளியில் வெண்ணிற ஆடையில்
துச்சமில்லாமல் சென்று கொண்டிருந்தேன்..
அறிவிப்பின்றி நீ வருவாய் என
எதிர்பாராமல் நடந்துசெல்ல
ஆர்ப்பரித்துக்கொண்டு என்னருகே வந்தேய்...
என் உச்சி நீ தொட்டு
என் உள்ளமும் உள்ளும்
குளிரச்செய்து....
எல்லை மீற ஆரம்பித்தாய்...
விரல்தொட்டாய் என விட்டுப்பார்த்தேன்...
நீ இதழ் தொட்டு...
என் ரோமம் பிடித்து
என்னுள் நீ உட்செல்ல...
எங்கிருந்தோ இருந்து எட்டிப்பார்த்தது
என்னுள் ஒளிந்திருந்த வெட்கம்...
என்னைக் காப்பாற்ற நான் முயல...
என் காதில் நீ முத்தமிட்ட ஈரம்
காயும்முன் மாறி மாறி முத்தங்கள்
பொழிந்து தள்ள...
என்னை மறந்தேன் நான்...
உடலெங்கும் உன் சுவடுகள்..
என்னை நீ ஆட்கொள்ள...
முற்றிலும் நனைந்திருந்தேன்
செல்ல மழையே ...
துச்சமில்லாமல் சென்று கொண்டிருந்தேன்..
அறிவிப்பின்றி நீ வருவாய் என
எதிர்பாராமல் நடந்துசெல்ல
ஆர்ப்பரித்துக்கொண்டு என்னருகே வந்தேய்...
என் உச்சி நீ தொட்டு
என் உள்ளமும் உள்ளும்
குளிரச்செய்து....
எல்லை மீற ஆரம்பித்தாய்...
விரல்தொட்டாய் என விட்டுப்பார்த்தேன்...
நீ இதழ் தொட்டு...
என் ரோமம் பிடித்து
என்னுள் நீ உட்செல்ல...
எங்கிருந்தோ இருந்து எட்டிப்பார்த்தது
என்னுள் ஒளிந்திருந்த வெட்கம்...
என்னைக் காப்பாற்ற நான் முயல...
என் காதில் நீ முத்தமிட்ட ஈரம்
காயும்முன் மாறி மாறி முத்தங்கள்
பொழிந்து தள்ள...
என்னை மறந்தேன் நான்...
உடலெங்கும் உன் சுவடுகள்..
என்னை நீ ஆட்கொள்ள...
முற்றிலும் நனைந்திருந்தேன்
செல்ல மழையே ...
உடலெங்கும் உன் முத்தம்
வெட்டவெளியில் வெண்ணிற ஆடையில்
துச்சமில்லாமல் சென்று கொண்டிருந்தேன்..
அறிவிப்பின்றி நீ வருவாய் என
எதிர்பாராமல் நடந்துசெல்ல
ஆர்ப்பரித்துக்கொண்டு என்னருகே வந்தேய்...
என் உச்சி நீ தொட்டு
என் உள்ளமும் உள்ளும்
குளிரச்செய்து....
எல்லை மீற ஆரம்பித்தாய்...
விரல்தொட்டாய் என விட்டுப்பார்த்தேன்...
நீ இதழ் தொட்டு...
என் ரோமம் பிடித்து
என்னுள் நீ உட்செல்ல...
எங்கிருந்தோ இருந்து எட்டிப்பார்த்தது
என்னுள் ஒளிந்திருந்த வெட்கம்...
என்னைக் காப்பாற்ற நான் முயல...
என் காதில் நீ முத்தமிட்ட ஈரம்
காயும்முன் மாறி மாறி முத்தங்கள்
பொழிந்து தள்ள...
என்னை மறந்தேன் நான்...
உடலெங்கும் உன் சுவடுகள்..
என்னை நீ ஆட்கொள்ள...
முற்றிலும் நனைந்திருந்தேன்
செல்ல மழையே ...
துச்சமில்லாமல் சென்று கொண்டிருந்தேன்..
அறிவிப்பின்றி நீ வருவாய் என
எதிர்பாராமல் நடந்துசெல்ல
ஆர்ப்பரித்துக்கொண்டு என்னருகே வந்தேய்...
என் உச்சி நீ தொட்டு
என் உள்ளமும் உள்ளும்
குளிரச்செய்து....
எல்லை மீற ஆரம்பித்தாய்...
விரல்தொட்டாய் என விட்டுப்பார்த்தேன்...
நீ இதழ் தொட்டு...
என் ரோமம் பிடித்து
என்னுள் நீ உட்செல்ல...
எங்கிருந்தோ இருந்து எட்டிப்பார்த்தது
என்னுள் ஒளிந்திருந்த வெட்கம்...
என்னைக் காப்பாற்ற நான் முயல...
என் காதில் நீ முத்தமிட்ட ஈரம்
காயும்முன் மாறி மாறி முத்தங்கள்
பொழிந்து தள்ள...
என்னை மறந்தேன் நான்...
உடலெங்கும் உன் சுவடுகள்..
என்னை நீ ஆட்கொள்ள...
முற்றிலும் நனைந்திருந்தேன்
செல்ல மழையே ...
Tuesday 8 November 2011
கையாலாகாதவன்
நடுநிசி ஆசைகளும்
மரத்துப்போகுதடி...
வெடித்துவரும் கண்ணீரும்
வெளிவர மறுக்கிறதடி...
எனக்குத் துணையாய் மழையும் அழுகிறதடி...
உன் விரல் பிடித்த நிமிடங்களை...
என் கண்ணில் நீ
உனைப் பார்த்த நிமிடங்களை...
வந்து வந்து போகுதடி உன் எண்ணம்...
விட்டுப்போய்விட்டாய் என்று உன்னை
விடவும் முடியவில்லை...
விட்டுச்சென்ற உன்னை வந்து
கேட்கவும் முடியவில்லை...
எனக்கான வாழ்க்கை எங்கே என?
மரத்துப்போகுதடி...
வெடித்துவரும் கண்ணீரும்
வெளிவர மறுக்கிறதடி...
எனக்குத் துணையாய் மழையும் அழுகிறதடி...
உன் விரல் பிடித்த நிமிடங்களை...
என் கண்ணில் நீ
உனைப் பார்த்த நிமிடங்களை...
வந்து வந்து போகுதடி உன் எண்ணம்...
விட்டுப்போய்விட்டாய் என்று உன்னை
விடவும் முடியவில்லை...
விட்டுச்சென்ற உன்னை வந்து
கேட்கவும் முடியவில்லை...
எனக்கான வாழ்க்கை எங்கே என?
Sunday 6 November 2011
பாடங்கள்
தலைவனும் தலைவியும் கூட
உதவி புரிவாளாம் தோழி...
அதற்குப் பெயர் களவு
என ஆரம்பித்தாள் தமிழ் ஆசிரியை...
பக்கத்து அறையில்
ஒரு ஹைட்ரஜனுடன் காதல்
இன்னொரு ஹைட்ரஜனுடன் கள்ளக்காதல்
ஒரு அவள் ஆக்சிஜன் செய்வதே
தண்ணீரின் காரணி
என ஆணியடித்துப் புரிய வைத்தான்
ஒரு நவீன இளைஞன்...
ஒரு மூளை அறையில்
என்னவென்றே புரியாத குழந்தைகளுக்கு
ஆங்கிலத்தில் ஆற்றிக்கொண்டிருந்தாள்
ஒரு தமிழ்ப்பெண்...
"x" என்பது எப்பொழுதும்
ஒரு தெரியாத கருமமென
கவலைப்படுத்திக்கொண்டிருந்தாள்
கணிதக்காரி ஒரு அறையில்...
ஒன்றிற்கும் உதவாத வரலாற்றில்
நடந்த போரினைக் கண்முன்
வைத்துக்கொண்டிருந்தான் ஒரு
ஆசிரியப்பெருமான்..
ப்ளாஸ்டிக்கினால் உலகம் மாசுபடும்
என்று சொல்லிக்கொண்டே
தன்னுடைய பையில் சுற்றி வைத்திருந்த
ப்ளாஸ்டிக் பையினை வெளியில் எறிந்தாள்
ஒரு சுற்றுப்புற அபிமானி...
இத்தனையும் அங்கங்கு நின்று கொண்டு
பார்த்துவிட்டு தொழில்பார்க்கச் சென்றான்
பள்ளிக்கு அருகே செருப்பு தைத்து
வாழ்க்கை நடத்தும் சிறுவன்...
உதவி புரிவாளாம் தோழி...
அதற்குப் பெயர் களவு
என ஆரம்பித்தாள் தமிழ் ஆசிரியை...
பக்கத்து அறையில்
ஒரு ஹைட்ரஜனுடன் காதல்
இன்னொரு ஹைட்ரஜனுடன் கள்ளக்காதல்
ஒரு அவள் ஆக்சிஜன் செய்வதே
தண்ணீரின் காரணி
என ஆணியடித்துப் புரிய வைத்தான்
ஒரு நவீன இளைஞன்...
ஒரு மூளை அறையில்
என்னவென்றே புரியாத குழந்தைகளுக்கு
ஆங்கிலத்தில் ஆற்றிக்கொண்டிருந்தாள்
ஒரு தமிழ்ப்பெண்...
"x" என்பது எப்பொழுதும்
ஒரு தெரியாத கருமமென
கவலைப்படுத்திக்கொண்டிருந்தாள்
கணிதக்காரி ஒரு அறையில்...
ஒன்றிற்கும் உதவாத வரலாற்றில்
நடந்த போரினைக் கண்முன்
வைத்துக்கொண்டிருந்தான் ஒரு
ஆசிரியப்பெருமான்..
ப்ளாஸ்டிக்கினால் உலகம் மாசுபடும்
என்று சொல்லிக்கொண்டே
தன்னுடைய பையில் சுற்றி வைத்திருந்த
ப்ளாஸ்டிக் பையினை வெளியில் எறிந்தாள்
ஒரு சுற்றுப்புற அபிமானி...
இத்தனையும் அங்கங்கு நின்று கொண்டு
பார்த்துவிட்டு தொழில்பார்க்கச் சென்றான்
பள்ளிக்கு அருகே செருப்பு தைத்து
வாழ்க்கை நடத்தும் சிறுவன்...
Thursday 3 November 2011
நித்திரைக்கு முன்...
ஒவ்வொரு இரவும்
உறங்கச்செல்லும் முன்
என்னிடம் எழும் கேள்வி...'
நாளையேனும் உனக்கான வாழ்க்கை
கிடைக்குமா?
எனக்கான வாழ்க்கை கிடைக்குமா?
எனக் கேட்டுக்கொண்டே தூங்கச்செல்லுது
இந்த உறங்கா மனது...
என் கண்கள் குளமான பின்னர்
நனைந்திடா வேண்டாம் என் தலையணை
என கண்கள் நினைக்க...
துடைத்துவிடலாம் என்று உதவ
வரும் என் கரங்களில்
நேற்று துடைத்த கண்ணீரின்
ஈரம் இன்னும் காயாமல் இருக்க...
வற்றிப்போகுது என் வார்த்தைகள்...
அழுகுரல் கேட்டுவிடக்கூடாது என
எத்தனை முறை முயன்றாலும்...
தோற்றுப்போகிறேன் நான்...
கண்கள் அயர்ந்தால் மட்டுமே எனக்கு
தூக்கம் எனத்தெரிந்து கொண்டபின்...
பழகிவிட்டது அழுகையும் காரணங்களும்...
அதனால் நான் பெற்ற ரணங்களும்...
உறங்கி எழுந்தபின் உதடுகள்
சொல்லத்துடித்தாலும்,உதவ மறுக்கும் மூளை...
எனக்கான காலை என்று விடியும்???
உறங்கச்செல்லும் முன்
என்னிடம் எழும் கேள்வி...'
நாளையேனும் உனக்கான வாழ்க்கை
கிடைக்குமா?
எனக்கான வாழ்க்கை கிடைக்குமா?
எனக் கேட்டுக்கொண்டே தூங்கச்செல்லுது
இந்த உறங்கா மனது...
என் கண்கள் குளமான பின்னர்
நனைந்திடா வேண்டாம் என் தலையணை
என கண்கள் நினைக்க...
துடைத்துவிடலாம் என்று உதவ
வரும் என் கரங்களில்
நேற்று துடைத்த கண்ணீரின்
ஈரம் இன்னும் காயாமல் இருக்க...
வற்றிப்போகுது என் வார்த்தைகள்...
அழுகுரல் கேட்டுவிடக்கூடாது என
எத்தனை முறை முயன்றாலும்...
தோற்றுப்போகிறேன் நான்...
கண்கள் அயர்ந்தால் மட்டுமே எனக்கு
தூக்கம் எனத்தெரிந்து கொண்டபின்...
பழகிவிட்டது அழுகையும் காரணங்களும்...
அதனால் நான் பெற்ற ரணங்களும்...
உறங்கி எழுந்தபின் உதடுகள்
சொல்லத்துடித்தாலும்,உதவ மறுக்கும் மூளை...
எனக்கான காலை என்று விடியும்???
Wednesday 2 November 2011
காக்கிச்சட்டை கணபதிகள்
ஊரக்காக்க உன்ன விட்டா
உலை பொங்கும்போதே சோறக்கேக்குற...
இருக்குறவனுங்ககிட்ட கையேந்தி ...
இல்லாதவங்ககிட்ட கை நீட்டுற...
வீட்டுக்கு காவல் வச்சா
பூட்ட ஒடச்சு தேடுற...
குத்தவாளிக்கு கும்பிடு போட்டு
வங்கிக்கணக்க ஏத்துற...
கால் கட்டைவிரல பாக்கவே
காட்டுத்தனமா மூச்சுவிடுற...
மாசக்கடைசியில மண்டைய சொரியுற...
எவனாச்சும் வந்தா வழிப்பறி செய்யுற...
பல்லக்காட்டி பிச்சை எடுக்குற...
சத்தியப்பிரமாணம் எல்லாம் சரியா செய்யுற
சல்யூட் மட்டும் பணத்துக்காக அடிக்குற...
சாவுக்கு வந்தா நெத்திக்காசையும் திருடுற...
உன் உடைக்கான மரியாத உனக்குத் தெரியுமா?
ஊர் கூடி எடுத்துச்சொன்னா புரியுமா?
உலை பொங்கும்போதே சோறக்கேக்குற...
இருக்குறவனுங்ககிட்ட கையேந்தி ...
இல்லாதவங்ககிட்ட கை நீட்டுற...
வீட்டுக்கு காவல் வச்சா
பூட்ட ஒடச்சு தேடுற...
குத்தவாளிக்கு கும்பிடு போட்டு
வங்கிக்கணக்க ஏத்துற...
கால் கட்டைவிரல பாக்கவே
காட்டுத்தனமா மூச்சுவிடுற...
மாசக்கடைசியில மண்டைய சொரியுற...
எவனாச்சும் வந்தா வழிப்பறி செய்யுற...
பல்லக்காட்டி பிச்சை எடுக்குற...
சத்தியப்பிரமாணம் எல்லாம் சரியா செய்யுற
சல்யூட் மட்டும் பணத்துக்காக அடிக்குற...
சாவுக்கு வந்தா நெத்திக்காசையும் திருடுற...
உன் உடைக்கான மரியாத உனக்குத் தெரியுமா?
ஊர் கூடி எடுத்துச்சொன்னா புரியுமா?
Tuesday 25 October 2011
ஒளி தரும் நாளா இது?
வண்ண வண்ண மத்தாப்புகள்
ஊரையே ஒளிரச்செய்து
எங்கெங்கோ வீற்றிருக்கும்
கடவுளுக்கெல்லாம் விளக்குகள் ஒளிர...
கைகளில் வளையங்கள்
புத்தம் புது ஆடைகள்...
காரமும் இனிப்பும் கலந்து
பல சுவையில் பதார்த்தங்கள்...
விண் முட்டும் வானங்கள்....
வெடித்துச்சிதறும் காட்சிகள்...
வீதிதோறும் மகிழ்ச்சியில்...
தீப ஒளித் திரு நாளில்...
பட்டாசுகள் பல செய்து...
மத்தாப்புக்கு மருந்து செய்து...
கைகளில் மருந்து சென்று
கழுவாத கையோடு
கால் வயிறு சோறுக்காக
கல்விச்சாலை செல்லமுடியாமல்..
கால்வயிறு பசி ஆறாமல்..
தின்ற சோறும் நோய்தந்து
உடலின் இருந்த சக்தி குறைந்து...
திக்கற்று இருந்த மழலைகள்
ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்தனர்
விண்முட்டிய வானவேடிக்கை
கீழ்வந்து சாம்பலாய் வீழ்ந்ததை...
-வான்போல் வண்ணம்கொண்டான்.
ஊரையே ஒளிரச்செய்து
எங்கெங்கோ வீற்றிருக்கும்
கடவுளுக்கெல்லாம் விளக்குகள் ஒளிர...
கைகளில் வளையங்கள்
புத்தம் புது ஆடைகள்...
காரமும் இனிப்பும் கலந்து
பல சுவையில் பதார்த்தங்கள்...
விண் முட்டும் வானங்கள்....
வெடித்துச்சிதறும் காட்சிகள்...
வீதிதோறும் மகிழ்ச்சியில்...
தீப ஒளித் திரு நாளில்...
பட்டாசுகள் பல செய்து...
மத்தாப்புக்கு மருந்து செய்து...
கைகளில் மருந்து சென்று
கழுவாத கையோடு
கால் வயிறு சோறுக்காக
கல்விச்சாலை செல்லமுடியாமல்..
கால்வயிறு பசி ஆறாமல்..
தின்ற சோறும் நோய்தந்து
உடலின் இருந்த சக்தி குறைந்து...
திக்கற்று இருந்த மழலைகள்
ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்தனர்
விண்முட்டிய வானவேடிக்கை
கீழ்வந்து சாம்பலாய் வீழ்ந்ததை...
-வான்போல் வண்ணம்கொண்டான்.
Monday 24 October 2011
எதிர்வீட்டு ஜன்னல்...
கருத்துப்போன வானம்
மஞ்சள் பூசி மாற வேண்டிய
தருணம் அது...
வருணனுக்கு அது
பிடிக்கவில்லை போல...
கதிரவனுக்கு கதவைத் திறக்காமல்
தாழிட்டு அடைத்து வைத்திருந்தான்
சில நேரம்..
தூரலாய் சில நேரம்...
பொழிவாய் சில நேரம்...
ஜன்னலோரத்தில் இருந்தே
அனைத்தையும் ரசித்தேன்...
எதிர்வீட்டு ஜன்னலில்
அவளும் எனக்கு ஜோடியாய்...
தூரல் தட்டி விளையாடிக்கொண்டிருந்தாள்..
அவள் விரல்பட்ட துளிகள்
கடல் செல்லாமலே முத்தாக மாறும்
மோட்சம் பெற்றன..
விரல்படாத துளிகள்
மண்ணில் விழுந்து
கதறி சத்தம் எழுப்பின...
தாமரை இலைமேல் நீர்த்துளிபோல்
கன்னத்தின் மேல் தனித்துளியாய்
வைரம்போல் மிளிர்ந்தது
மழைத்துளி...
மழை ஓய்ந்த பின்னரும்
சாரலாய் என் மனதை
நனைத்துக்கொண்டிருந்தாள் அந்த
எதிர்வீட்டு ஜன்னல்...
மஞ்சள் பூசி மாற வேண்டிய
தருணம் அது...
வருணனுக்கு அது
பிடிக்கவில்லை போல...
கதிரவனுக்கு கதவைத் திறக்காமல்
தாழிட்டு அடைத்து வைத்திருந்தான்
சில நேரம்..
தூரலாய் சில நேரம்...
பொழிவாய் சில நேரம்...
ஜன்னலோரத்தில் இருந்தே
அனைத்தையும் ரசித்தேன்...
எதிர்வீட்டு ஜன்னலில்
அவளும் எனக்கு ஜோடியாய்...
தூரல் தட்டி விளையாடிக்கொண்டிருந்தாள்..
அவள் விரல்பட்ட துளிகள்
கடல் செல்லாமலே முத்தாக மாறும்
மோட்சம் பெற்றன..
விரல்படாத துளிகள்
மண்ணில் விழுந்து
கதறி சத்தம் எழுப்பின...
தாமரை இலைமேல் நீர்த்துளிபோல்
கன்னத்தின் மேல் தனித்துளியாய்
வைரம்போல் மிளிர்ந்தது
மழைத்துளி...
மழை ஓய்ந்த பின்னரும்
சாரலாய் என் மனதை
நனைத்துக்கொண்டிருந்தாள் அந்த
எதிர்வீட்டு ஜன்னல்...
Saturday 22 October 2011
அர்த்தநாரி
கோவிலுக்கு போய் நிக்குறாங்க
பிள்ளை வரம் கேக்குறாங்க
ஆணாய் பொறந்தா
ஆனந்தமா வளர்க்குறாங்க
உள்ளுக்குள்ள மாறுதல் வந்து
உள்ள இருக்க பெண்மையை
உணர்ந்தா
ஒதுக்கிவைக்க பாக்குறாங்க
படிக்கப்போனா அங்கயும் ஒதுக்கிவச்சு
ஒதுக்குப்புறமா வர சொல்லுறாங்க
கத்துக்க வந்த எடத்துல
கட்டில் காட்டி சிரிக்குறாங்க
ஒஸ்சுன்னு கூப்பிட்டு
ஒம்போதுனு கேலி பண்ணி
கைத்தட்டி கூப்பிட்டு
கண்ட இடத்துல கை வக்கீறாங்க...
கோவிலுக்கு மட்டும் போன
வாய் தொறந்து சொல்லுறாங்க
"அர்த்தநாரியப்பா என்ன நீதான் காப்பாத்தனும்"
பிள்ளை வரம் கேக்குறாங்க
ஆணாய் பொறந்தா
ஆனந்தமா வளர்க்குறாங்க
உள்ளுக்குள்ள மாறுதல் வந்து
உள்ள இருக்க பெண்மையை
உணர்ந்தா
ஒதுக்கிவைக்க பாக்குறாங்க
படிக்கப்போனா அங்கயும் ஒதுக்கிவச்சு
ஒதுக்குப்புறமா வர சொல்லுறாங்க
கத்துக்க வந்த எடத்துல
கட்டில் காட்டி சிரிக்குறாங்க
ஒஸ்சுன்னு கூப்பிட்டு
ஒம்போதுனு கேலி பண்ணி
கைத்தட்டி கூப்பிட்டு
கண்ட இடத்துல கை வக்கீறாங்க...
கோவிலுக்கு மட்டும் போன
வாய் தொறந்து சொல்லுறாங்க
"அர்த்தநாரியப்பா என்ன நீதான் காப்பாத்தனும்"
என் மடியில் என்னவள்
நான் சொல்வதெல்லாம் செய்கிறாள்
நான் சொல்லாததையும் செய்கிறாள்...
தன்னையும் காத்துக்கொள்கிறாள்
காத்துக்கொள்வதற்கு என் உதவியும்
தேவை எனக் கூறுகிறாள்...
இசை உதிர்த்து என்
நிலை மாற்றுகிறாள்....
என்னைப்பற்றி மட்டுமில்லாது
உலகத்தின் தகவலையும்
தன்னுள் வைத்துள்ளாள்...
அவ்வப்பொழுது அடம்பிடிப்பாள்...
ஆனாலும் விட்டுக்கொடுப்பாள்...
கற்பனைக்கு காரணங்களைத் தருகிறாள்
கற்பனைக்கு எட்டாத விசயங்களையும்
கண்ணுக்கு காட்சியளிக்கிறாள்...
மடியிலும் கட்டிலிலும் என் விரலொடு
தவழ்வதே அவளுக்குப் பிடிக்கும்...
என் அழகிய மடிக்கணினி...
நான் சொல்லாததையும் செய்கிறாள்...
தன்னையும் காத்துக்கொள்கிறாள்
காத்துக்கொள்வதற்கு என் உதவியும்
தேவை எனக் கூறுகிறாள்...
இசை உதிர்த்து என்
நிலை மாற்றுகிறாள்....
என்னைப்பற்றி மட்டுமில்லாது
உலகத்தின் தகவலையும்
தன்னுள் வைத்துள்ளாள்...
அவ்வப்பொழுது அடம்பிடிப்பாள்...
ஆனாலும் விட்டுக்கொடுப்பாள்...
கற்பனைக்கு காரணங்களைத் தருகிறாள்
கற்பனைக்கு எட்டாத விசயங்களையும்
கண்ணுக்கு காட்சியளிக்கிறாள்...
மடியிலும் கட்டிலிலும் என் விரலொடு
தவழ்வதே அவளுக்குப் பிடிக்கும்...
என் அழகிய மடிக்கணினி...
எது காதல்?
முதுகுப்பையில் புத்தகங்கள்
கனத்திருக்க
கைபிடித்து நடந்துசென்ற
பருவம்வராக் காதல்...
புகைமண்டலம் கிளம்பி
மூச்சடைக்கும் சாலையில்
மூச்சிறைக்க ஓடி வந்து
படியில் இடம்பிடித்து
அவளின் மனதிலும் இடம்பிடித்த
பேருந்துக்காதல்...
பேருந்துக்கு இவள் காத்திருக்க
இவள் பதிலுக்காக அவன்
காத்திருக்கும் தினசரி
பேருந்து நிறுத்தக் காதல்...
நேற்று பெய்த மழையில்
குடைபிடித்து நடந்துவந்த அவளின்
அழகு கண்டு அவன் கொண்ட
அரை நொடிக் காதல்...
இணையத்தில் இவன் எழுத
இவன் எழுத்தினை இவள் ரசிக்க
எண்ணங்கள் பரிமாறிக்கொண்ட
முகம்காணா காதல்...
காதல் தோல்வியில் அவன் கசிந்துருக
கண்ணீர் துடைத்தபின் அவள்கொண்ட
அதிசயக்காதல்...
விளையாட்டாய் வாழ்வை நினைத்து
கட்டிலை மட்டும் பரிமாறிக்கொள்ளும்
சில கருமம்பிடித்த காதல்...
எது காதலென்றே தெரியாமல்
காதல்தான் உயர்ந்தது எனக்
கங்கணம் கட்டி
பெற்றோரையும் ஒதுக்கித்தள்ளும்
கிருக்கர்களின் காதல்
எழுதிவைத்தேன் என் மனதில்
எது என் காதல்?
எங்கே என் காதல்?
கனத்திருக்க
கைபிடித்து நடந்துசென்ற
பருவம்வராக் காதல்...
புகைமண்டலம் கிளம்பி
மூச்சடைக்கும் சாலையில்
மூச்சிறைக்க ஓடி வந்து
படியில் இடம்பிடித்து
அவளின் மனதிலும் இடம்பிடித்த
பேருந்துக்காதல்...
பேருந்துக்கு இவள் காத்திருக்க
இவள் பதிலுக்காக அவன்
காத்திருக்கும் தினசரி
பேருந்து நிறுத்தக் காதல்...
நேற்று பெய்த மழையில்
குடைபிடித்து நடந்துவந்த அவளின்
அழகு கண்டு அவன் கொண்ட
அரை நொடிக் காதல்...
இணையத்தில் இவன் எழுத
இவன் எழுத்தினை இவள் ரசிக்க
எண்ணங்கள் பரிமாறிக்கொண்ட
முகம்காணா காதல்...
காதல் தோல்வியில் அவன் கசிந்துருக
கண்ணீர் துடைத்தபின் அவள்கொண்ட
அதிசயக்காதல்...
விளையாட்டாய் வாழ்வை நினைத்து
கட்டிலை மட்டும் பரிமாறிக்கொள்ளும்
சில கருமம்பிடித்த காதல்...
எது காதலென்றே தெரியாமல்
காதல்தான் உயர்ந்தது எனக்
கங்கணம் கட்டி
பெற்றோரையும் ஒதுக்கித்தள்ளும்
கிருக்கர்களின் காதல்
எழுதிவைத்தேன் என் மனதில்
எது என் காதல்?
எங்கே என் காதல்?
விட்டுவிடு
இது மனக்குழப்பம் அல்ல..
மனிதன் வாடிக்கையாய் கொள்ளும் குழப்பம்...
உன் காதல் பெரியதா என்பதல்ல என் கேள்வி..
உன் காதலுக்கு நான் உரித்தானவனா
என்பதே என் கேள்வி...
விடை கேட்கிறாய் என்னிடம்..
கேள்வி கேட்கிறேன் உன்னிடம்...
இனி எங்கு செல்வது
என தெரியாமல்
குழம்பி நிற்கிறேன் உன்
விழி வாசலில்...
இன்னும் சில யுகங்கள்
ஆனாலும் எனக்கு விடை தோணாது
உன் கேள்விக்கு...
அதற்கு மாறாய் என் கேள்விகள்
அதிகமாகிக் கொண்டிருக்கும்...
யாரடி நீ எனக்கு...?
எதற்கடி நான் உனக்கு...
எவ்விடம் நோக்கி நான் செல்கிறேன்..
எதற்காக என்னை நீ தொடர்கிறாய்...
என் முடிவு தெரியாத பேதை நீயடி...
என் முடிவு தெரிந்த முட்டாள் நானடி...
ஆறடிக்குளிக்குள் விழக்காத்திருக்கும்
உயிர்ச்சவம் நான்..
உன் மனக்குளிக்குள் விழுவேன்
என எண்ணாதேயடி...
இனியும் என்னைத் தொடராதே...
தோல்வியை ஒப்புக்கொண்டு
நானும் உன்மேல்
காதல் கொண்டுவிடுவேன்...
மனிதன் வாடிக்கையாய் கொள்ளும் குழப்பம்...
உன் காதல் பெரியதா என்பதல்ல என் கேள்வி..
உன் காதலுக்கு நான் உரித்தானவனா
என்பதே என் கேள்வி...
விடை கேட்கிறாய் என்னிடம்..
கேள்வி கேட்கிறேன் உன்னிடம்...
இனி எங்கு செல்வது
என தெரியாமல்
குழம்பி நிற்கிறேன் உன்
விழி வாசலில்...
இன்னும் சில யுகங்கள்
ஆனாலும் எனக்கு விடை தோணாது
உன் கேள்விக்கு...
அதற்கு மாறாய் என் கேள்விகள்
அதிகமாகிக் கொண்டிருக்கும்...
யாரடி நீ எனக்கு...?
எதற்கடி நான் உனக்கு...
எவ்விடம் நோக்கி நான் செல்கிறேன்..
எதற்காக என்னை நீ தொடர்கிறாய்...
என் முடிவு தெரியாத பேதை நீயடி...
என் முடிவு தெரிந்த முட்டாள் நானடி...
ஆறடிக்குளிக்குள் விழக்காத்திருக்கும்
உயிர்ச்சவம் நான்..
உன் மனக்குளிக்குள் விழுவேன்
என எண்ணாதேயடி...
இனியும் என்னைத் தொடராதே...
தோல்வியை ஒப்புக்கொண்டு
நானும் உன்மேல்
காதல் கொண்டுவிடுவேன்...
ஏனடி..?
நான் எங்கோ பார்க்கும்பொழுது
எனை மட்டுமே பார்த்து...
என் பார்வை உன்னிடம்
திரும்பும்போது , வேறெங்கோ பார்த்தது...
ஏனடி...?
பிழை என்னிடம் இருந்தாலும்,
"நான் தான் இதற்கு
காரணம்" எனக்கூறியது...
ஏனடி..?
குறுஞ்செய்தி வரவில்லை என்றவுடன்
கோபம் காட்டியது
ஏனடி...?
எனக்கு காய்ச்சல் என்றவுடன்,
உண்ணா நோன்பு இருந்தாய்...
ஏனடி...?
அணைக்கும்பொழுது புன்முறுவல்
பூத்தாய், உதடுகளின் மீது
இதழ் பதித்தபோதெல்லம்
விழிகளில் மழை பொழிதாய்
ஏனடி...?
விடைபெறும் போதெல்லாம்
என் விரல் பிடித்தாய்
ஏனடி...?
இத்துனை நடந்தும் இன்று
நான் தனிமையில்.
ஏனடி..???
எனை மட்டுமே பார்த்து...
என் பார்வை உன்னிடம்
திரும்பும்போது , வேறெங்கோ பார்த்தது...
ஏனடி...?
பிழை என்னிடம் இருந்தாலும்,
"நான் தான் இதற்கு
காரணம்" எனக்கூறியது...
ஏனடி..?
குறுஞ்செய்தி வரவில்லை என்றவுடன்
கோபம் காட்டியது
ஏனடி...?
எனக்கு காய்ச்சல் என்றவுடன்,
உண்ணா நோன்பு இருந்தாய்...
ஏனடி...?
அணைக்கும்பொழுது புன்முறுவல்
பூத்தாய், உதடுகளின் மீது
இதழ் பதித்தபோதெல்லம்
விழிகளில் மழை பொழிதாய்
ஏனடி...?
விடைபெறும் போதெல்லாம்
என் விரல் பிடித்தாய்
ஏனடி...?
இத்துனை நடந்தும் இன்று
நான் தனிமையில்.
ஏனடி..???
தன்னுள் கோடி ஆசைகள்
அவனைக் காணும்போதெல்லாம்
தெரிவிக்கத் தூண்டும்
அவா அவளுக்கு...
நீயே என் உயிர்
இதயத்தில் தோன்றிய காதல் இது
உன் கண்களில் வாழ்ந்து பார்க்க ஆசை...
உன் விரல் பிடித்து அழ ஆசை...
உன் மடி மீது இறக்க ஆசை..
எனக்கான வாழ்வு உன்னுடன்
இந்த நெற்றியில் வரப்போகும்
குங்குமமும் உன் விரலால்தான்
என்றெல்லாம் தெரிவிக்க அவாக்கொள்கிறாள்...
கிடைத்த வாய்ப்புகளை எல்லாம்
பறிகொடுத்து விட்டாள்...
இன்றாவது தெரிவித்துவிட
வேண்டும் என்று முடிவு செய்து...
வெள்ளைத்தாள் எடுத்துத் தன்
வெள்ளை மனக்காதலை எழுதினாள்
காதலைக் கூற முடியாத
பேசா மடந்தை...
அவனைக் காணும்போதெல்லாம்
தெரிவிக்கத் தூண்டும்
அவா அவளுக்கு...
நீயே என் உயிர்
இதயத்தில் தோன்றிய காதல் இது
உன் கண்களில் வாழ்ந்து பார்க்க ஆசை...
உன் விரல் பிடித்து அழ ஆசை...
உன் மடி மீது இறக்க ஆசை..
எனக்கான வாழ்வு உன்னுடன்
இந்த நெற்றியில் வரப்போகும்
குங்குமமும் உன் விரலால்தான்
என்றெல்லாம் தெரிவிக்க அவாக்கொள்கிறாள்...
கிடைத்த வாய்ப்புகளை எல்லாம்
பறிகொடுத்து விட்டாள்...
இன்றாவது தெரிவித்துவிட
வேண்டும் என்று முடிவு செய்து...
வெள்ளைத்தாள் எடுத்துத் தன்
வெள்ளை மனக்காதலை எழுதினாள்
காதலைக் கூற முடியாத
பேசா மடந்தை...
இப்படியும் ஒருத்தி
பாட்டியின் மடியில்
அசந்து உறங்கியிருந்தாள்
ஐந்து வயது அழகுக் குழந்தை
அவள் அன்னை எங்கே என
அவள் தந்தை தேட
அவளின் தாயோ தேடிக்கொண்டிருந்தாள்
பத்தாயிரம் ரூபாயில்
மலிவுவிலைப் பட்டுச்சேலையை...
அசந்து உறங்கியிருந்தாள்
ஐந்து வயது அழகுக் குழந்தை
அவள் அன்னை எங்கே என
அவள் தந்தை தேட
அவளின் தாயோ தேடிக்கொண்டிருந்தாள்
பத்தாயிரம் ரூபாயில்
மலிவுவிலைப் பட்டுச்சேலையை...
கடைசி கேள்வி
நிலவில் முதலில்
அமெரிக்கனா கால் வைத்தான்?
எதற்காக ஏழை பணக்காரன்
ஒப்பீடுகள் மக்களுக்குள்?
எதற்காக இந்த சமுதாயத்தில்
சாதி சமய ஏற்றத்தாழ்வுகள்?
பட்டுச்சேலையின் மீதும்
தங்க நகையின் மீதுமுள்ள மோகம்
பெண்களுக்கு என்றுதான் குறையும்?
மக்களுக்கு சோறு போட
முடியாத நாட்டில்
எதற்கு செவ்வாய் கிரக ஆராய்ச்சி?
எத்தனையோ கேள்விகள்
கேட்டுவிட்டேன்
கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்...
எத்தனை கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலும்
என் கடைசி கேள்வி இது...
என் சாவுக்கு அவள் வருவாளா?
அமெரிக்கனா கால் வைத்தான்?
எதற்காக ஏழை பணக்காரன்
ஒப்பீடுகள் மக்களுக்குள்?
எதற்காக இந்த சமுதாயத்தில்
சாதி சமய ஏற்றத்தாழ்வுகள்?
பட்டுச்சேலையின் மீதும்
தங்க நகையின் மீதுமுள்ள மோகம்
பெண்களுக்கு என்றுதான் குறையும்?
மக்களுக்கு சோறு போட
முடியாத நாட்டில்
எதற்கு செவ்வாய் கிரக ஆராய்ச்சி?
எத்தனையோ கேள்விகள்
கேட்டுவிட்டேன்
கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்...
எத்தனை கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலும்
என் கடைசி கேள்வி இது...
என் சாவுக்கு அவள் வருவாளா?
யாரிவள்
அழகாக இருக்கிறாள்..
அலட்சியத்தால் வெறுக்க வைத்தாலும்
அடம்பிடித்து நிற்கிறாள்...
கனிவாகப் பேசுகிறாள்
இருந்தாலும்
கவனிக்காதது போல
பாவனைகள் புரிகிறாள்..
மனம் திறந்து பேச முயன்றும்
மனம் ஒத்துழைக்காமல் கைவிடுகிறாள்..
விதியின் சதியால் மாட்டிக்கொண்டேன்...
எனினும் விடுபட எண்ணமில்லை...
அலட்சியத்தால் வெறுக்க வைத்தாலும்
அடம்பிடித்து நிற்கிறாள்...
கனிவாகப் பேசுகிறாள்
இருந்தாலும்
கவனிக்காதது போல
பாவனைகள் புரிகிறாள்..
மனம் திறந்து பேச முயன்றும்
மனம் ஒத்துழைக்காமல் கைவிடுகிறாள்..
விதியின் சதியால் மாட்டிக்கொண்டேன்...
எனினும் விடுபட எண்ணமில்லை...
Thursday 6 October 2011
ஒரு குடை
உன்னைச்சுற்றிப் பெய்யும்
மழையில்...
உஷ்ணக் காற்று
என்னைச்சுற்றி...
என்மேல் விழுந்த
மழைத்துளி
வெப்பமானது உன்
உதட்டசைவில்...
உன் விரல் சூட்டில்
குளிர் நனைகிறேன்
நான்...
ஒரு குடையில்
இரு உயிர்கள்...
மழையில்...
உஷ்ணக் காற்று
என்னைச்சுற்றி...
என்மேல் விழுந்த
மழைத்துளி
வெப்பமானது உன்
உதட்டசைவில்...
உன் விரல் சூட்டில்
குளிர் நனைகிறேன்
நான்...
ஒரு குடையில்
இரு உயிர்கள்...
Friday 30 September 2011
காணவில்லை
மூன்று பிரி முடி வகுந்து
பின்னலில் செம்பருத்தி...
இன்று முடி விரித்து அலைகிறாள்
நம் தமிழ் பெண்ணொருத்தி..
மஞ்சள் பூசி குளித்தாய் அன்று
மருந்து போட்டு கிளம்புகிறாய் இன்று...
காணாமல் போன குங்குமமும்
கண்ணீர் விடுகிறதடி...
கொல்லைப்புறத்தின் பூத்த செடி
மெஹந்தியால் கருகிப்போகுதடி
மருதாணி என்ற சொல்லையே
நீ மறந்து போனாயடி...
சோமபானமும் எடுக்கிறாய்
ஏன் எனக் கேட்டால்
நாகரிகம் வளர்ந்துவிட்டது என்கிறாய்..
மேலாடை காணவில்லை
மேற்க்கத்திய மோகத்தால்...
கவலை இல்லையோ உனக்கு
கண்களால் கற்பழித்தால் ...
பெண் என்று உள்ளத்தால்
மட்டும் இருந்தால் போதுமா...?
மறக்காதே பெண்ணே நீயும்
தமிழச்சி தான்...
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
கேட்கவில்லை உன்னிடம்...
பெண்ணாய் வாழ்ந்து பாரடி
புகழ் வந்து நிற்கும் உன்னிடம்...
பின்னலில் செம்பருத்தி...
இன்று முடி விரித்து அலைகிறாள்
நம் தமிழ் பெண்ணொருத்தி..
மஞ்சள் பூசி குளித்தாய் அன்று
மருந்து போட்டு கிளம்புகிறாய் இன்று...
காணாமல் போன குங்குமமும்
கண்ணீர் விடுகிறதடி...
கொல்லைப்புறத்தின் பூத்த செடி
மெஹந்தியால் கருகிப்போகுதடி
மருதாணி என்ற சொல்லையே
நீ மறந்து போனாயடி...
சோமபானமும் எடுக்கிறாய்
ஏன் எனக் கேட்டால்
நாகரிகம் வளர்ந்துவிட்டது என்கிறாய்..
மேலாடை காணவில்லை
மேற்க்கத்திய மோகத்தால்...
கவலை இல்லையோ உனக்கு
கண்களால் கற்பழித்தால் ...
பெண் என்று உள்ளத்தால்
மட்டும் இருந்தால் போதுமா...?
மறக்காதே பெண்ணே நீயும்
தமிழச்சி தான்...
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
கேட்கவில்லை உன்னிடம்...
பெண்ணாய் வாழ்ந்து பாரடி
புகழ் வந்து நிற்கும் உன்னிடம்...
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
என்னவென்று தெரியாமல்
ஒரு சிந்தனை...
பதில் கிடைக்குமா?
இது ஒருவேளையில்
நிரந்தரமா?
நிரந்தரமில்லை ஆனாலும்
எதற்கு இந்தப் போராட்டம்?
கண்ணீருடனே முடிகிறதே?
எதற்கு இந்தப் பயணம்?
என்னதான் இதன் பதில்?
இதில் வென்றவர் எவரும் உண்டோ?
பதில் கண்டவர் எவரும் உண்டோ?
ஆமா...
வாழ்க்கைனா என்ன?
ஒரு சிந்தனை...
பதில் கிடைக்குமா?
இது ஒருவேளையில்
நிரந்தரமா?
நிரந்தரமில்லை ஆனாலும்
எதற்கு இந்தப் போராட்டம்?
கண்ணீருடனே முடிகிறதே?
எதற்கு இந்தப் பயணம்?
என்னதான் இதன் பதில்?
இதில் வென்றவர் எவரும் உண்டோ?
பதில் கண்டவர் எவரும் உண்டோ?
ஆமா...
வாழ்க்கைனா என்ன?
சுடுகாடு
சாகுறவரைக்கும்தான் சாதி
என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...
சாதிக்கென தனி சுடுகாடுகள்
இருக்கின்றனவாம்...
புதைத்த பின்னும்
எரித்த பின்னும்
சாதி பேசுவது இந்த
உயிர்ப்பிணங்கள்தான்...
என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...
சாதிக்கென தனி சுடுகாடுகள்
இருக்கின்றனவாம்...
புதைத்த பின்னும்
எரித்த பின்னும்
சாதி பேசுவது இந்த
உயிர்ப்பிணங்கள்தான்...
எங்கே மனிதம்?
உச்சிப்பொழுதின் வேளையில்
கடற்கரையின் நிழலில்
சுண்டல் விற்ற அந்த
ஒற்றைச் சிறுவன்...
அன்னதான மணி அடிக்க
அலறியடித்து வந்த கூட்டத்தில்
தடுக்கி விழுந்த பிஞ்சுக்கால்கள்...
போக்குவரத்து நெரிசலில்
கைக்குழந்தையுடன்
இளம்பெண் ஒருத்தி...
கல்லுடைத்துக் கைகள்
மரத்துப்போன சிறார்கள்...
அடுக்கிவைத்த செங்கலுடன்
ஆறு வயது சிட்டுக்குருவி...
ஆர்ப்பரித்த கைத்தட்டல்களுடன்
பாராட்டி விடைபெற்றனர்
மனமில்லாத பணம்பெற்றவர்கள்...
சுவறில் இருந்த ஓவியங்கள் மட்டும்
உயிருடன் வாழ்ந்துகொண்டு
இருந்தன...
ஓவியனின் கைவண்ணத்தில்...
கடற்கரையின் நிழலில்
சுண்டல் விற்ற அந்த
ஒற்றைச் சிறுவன்...
அன்னதான மணி அடிக்க
அலறியடித்து வந்த கூட்டத்தில்
தடுக்கி விழுந்த பிஞ்சுக்கால்கள்...
போக்குவரத்து நெரிசலில்
கைக்குழந்தையுடன்
இளம்பெண் ஒருத்தி...
கல்லுடைத்துக் கைகள்
மரத்துப்போன சிறார்கள்...
அடுக்கிவைத்த செங்கலுடன்
ஆறு வயது சிட்டுக்குருவி...
ஆர்ப்பரித்த கைத்தட்டல்களுடன்
பாராட்டி விடைபெற்றனர்
மனமில்லாத பணம்பெற்றவர்கள்...
சுவறில் இருந்த ஓவியங்கள் மட்டும்
உயிருடன் வாழ்ந்துகொண்டு
இருந்தன...
ஓவியனின் கைவண்ணத்தில்...
Tuesday 27 September 2011
ஏமாற்றம்
இடைவிடாத மழையில்
காகிதக்கப்பல் விட்டு
கவிழ்ந்ததைக்கண்டு
ஏமாந்த எனக்கு...
இருதயக் காதலை
அவளிடம் எதிர்பார்த்து
ஏமாறத் தெரியாதா??
காகிதக்கப்பல் விட்டு
கவிழ்ந்ததைக்கண்டு
ஏமாந்த எனக்கு...
இருதயக் காதலை
அவளிடம் எதிர்பார்த்து
ஏமாறத் தெரியாதா??
ஒட்டுண்ணி
எனக்காக நீயும்
உனக்காக நானும்
பிறக்கவில்லை...
எதோ காதல் என்னும்
ஒட்டுண்ணி...
எங்கோ ஒளிந்திருந்து...
கிடைத்த இதயத்தில் ஒட்டி
இருக்கும் ரத்தத்தை உறிந்து
காதல் நோயை உண்டாக்கிவிடுகிறது...
உனக்காக நானும்
பிறக்கவில்லை...
எதோ காதல் என்னும்
ஒட்டுண்ணி...
எங்கோ ஒளிந்திருந்து...
கிடைத்த இதயத்தில் ஒட்டி
இருக்கும் ரத்தத்தை உறிந்து
காதல் நோயை உண்டாக்கிவிடுகிறது...
Monday 19 September 2011
என்கடன் பணியே
அரங்கநாதன் கோலத்தில்
அவள் வீற்றிருக்க...
அவள்பதம் தொட்டேன்...
என் கைவசம் அவளின்
கால்கள் தஞ்சம் புகுந்தது...
நான் செய்த பாவங்களும்
புண்ணியமாயின போலும்...
என்கைப்பதம் அவளின்
கால்களில் விளையாட...
விரலுக்கு சொடுக்கெடுக்க
விடுதலையடைந்தது வலிகள்...
அயர்ந்த அவள்
கண்ணுறங்கிப் போனாள்...
என் தாய் உறங்கியபின்
தாய்மையை உணர்ந்தேன்
என்னிடம்...
அவள் வீற்றிருக்க...
அவள்பதம் தொட்டேன்...
என் கைவசம் அவளின்
கால்கள் தஞ்சம் புகுந்தது...
நான் செய்த பாவங்களும்
புண்ணியமாயின போலும்...
என்கைப்பதம் அவளின்
கால்களில் விளையாட...
விரலுக்கு சொடுக்கெடுக்க
விடுதலையடைந்தது வலிகள்...
அயர்ந்த அவள்
கண்ணுறங்கிப் போனாள்...
என் தாய் உறங்கியபின்
தாய்மையை உணர்ந்தேன்
என்னிடம்...
Sunday 18 September 2011
என்செய்வோம் இனி
நட்ட மரத்தை வெட்டியாச்சு...
வெட்டிய மரத்த வித்தாச்சு...
காத்துல கரியமிலம் கலந்தாச்சு...
கார்பன் மோனாக்சைடும் சேந்தாச்சு...
ஓசோன்ல ஓட்டைய போட்டாச்சு...
எல்லாத்தையும் ஆட்டையப் போட்டாச்சு...
குடிதண்ணியும் காசாச்சு...
இனி உள்ளபோற காத்தும் காசாகும்...
அணு உலைகள் வச்சா
அணுதினமும் ஆபத்துதாகும்...
கட்டுக்கட்டா சேத்த பணம்
நீ கட்டையில போகும்போது வருமா..?
இயற்கைய நீ அழிச்சா
உன் சந்ததிய அது சும்மா விடுமா?
வெட்டிய மரத்த வித்தாச்சு...
காத்துல கரியமிலம் கலந்தாச்சு...
கார்பன் மோனாக்சைடும் சேந்தாச்சு...
ஓசோன்ல ஓட்டைய போட்டாச்சு...
எல்லாத்தையும் ஆட்டையப் போட்டாச்சு...
குடிதண்ணியும் காசாச்சு...
இனி உள்ளபோற காத்தும் காசாகும்...
அணு உலைகள் வச்சா
அணுதினமும் ஆபத்துதாகும்...
கட்டுக்கட்டா சேத்த பணம்
நீ கட்டையில போகும்போது வருமா..?
இயற்கைய நீ அழிச்சா
உன் சந்ததிய அது சும்மா விடுமா?
Friday 16 September 2011
யோசித்துப்பார்
பாடிப்பறக்கும் பச்சைக்கிளி
கட்டைப்பெட்டியில் உள்ளே
எடுக்கும் சீட்டுதான்
உன் எதிர்காலமா?
ஏழு மிளகாயும்
அதன் கீழிருக்கும்
எலுமிச்சையும் உனக்கு நன்மையா?
உனக்கும் நாய்க்கும்
திருமணம் செய்தால்
மாரி பொழிந்துவிடுமோ?
ரேகைகள் மட்டும் வாழ்க்கையெனில்
கரம் இல்லாதவனுக்கு வாழ்க்கை இல்லயா?
உன்மேல் உனக்கில்லாத
நம்பிக்கைதான் இத்தனை
அவலங்களுக்கும் ஆரம்பம்...
யோசித்துப்பார் தோழா...
கட்டைப்பெட்டியில் உள்ளே
எடுக்கும் சீட்டுதான்
உன் எதிர்காலமா?
ஏழு மிளகாயும்
அதன் கீழிருக்கும்
எலுமிச்சையும் உனக்கு நன்மையா?
உனக்கும் நாய்க்கும்
திருமணம் செய்தால்
மாரி பொழிந்துவிடுமோ?
ரேகைகள் மட்டும் வாழ்க்கையெனில்
கரம் இல்லாதவனுக்கு வாழ்க்கை இல்லயா?
உன்மேல் உனக்கில்லாத
நம்பிக்கைதான் இத்தனை
அவலங்களுக்கும் ஆரம்பம்...
யோசித்துப்பார் தோழா...
யோசித்துப்பார்
பாடிப்பறக்கும் பச்சைக்கிளி
கட்டைப்பெட்டியில் உள்ளே
எடுக்கும் சீட்டுதான்
உன் எதிர்காலமா?
ஏழு மிளகாயும்
அதன் கீழிருக்கும்
எலுமிச்சையும் உனக்கு நன்மையா?
உனக்கும் நாய்க்கும்
திருமணம் செய்தால்
மாரி பொழிந்துவிடுமோ?
ரேகைகள் மட்டும் வாழ்க்கையெனில்
கரம் இல்லாதவனுக்கு வாழ்க்கை இல்லயா?
உன்மேல் உனக்கில்லாத
நம்பிக்கைதான் இத்தனை
அவலங்களுக்கும் ஆரம்பம்...
யோசித்துப்பார் தோழா...
கட்டைப்பெட்டியில் உள்ளே
எடுக்கும் சீட்டுதான்
உன் எதிர்காலமா?
ஏழு மிளகாயும்
அதன் கீழிருக்கும்
எலுமிச்சையும் உனக்கு நன்மையா?
உனக்கும் நாய்க்கும்
திருமணம் செய்தால்
மாரி பொழிந்துவிடுமோ?
ரேகைகள் மட்டும் வாழ்க்கையெனில்
கரம் இல்லாதவனுக்கு வாழ்க்கை இல்லயா?
உன்மேல் உனக்கில்லாத
நம்பிக்கைதான் இத்தனை
அவலங்களுக்கும் ஆரம்பம்...
யோசித்துப்பார் தோழா...
இயற்கை அன்னை
கை நீட்டி அடித்தபின்
கட்டித்தவழும் அன்னைபோல...
கரைபுரண்டு வந்தது
வெள்ளம்... அடங்கியபின்னும்
அழகாய் பாய்ந்தது...
இயற்கையின் அழகு...
கட்டித்தவழும் அன்னைபோல...
கரைபுரண்டு வந்தது
வெள்ளம்... அடங்கியபின்னும்
அழகாய் பாய்ந்தது...
இயற்கையின் அழகு...
Saturday 10 September 2011
கடிதம்
எடுத்து வைத்த தாள்
விரல் நடுவில் பேனாவும்
தன்னிலை மாறாமல் அப்படியே...
இறந்து போன ரோஜாவோ
காய்ந்து கருகப்போகிறோமா?
அவள் கைசென்று
நசுங்கிவிடுவோமா?
இல்லை அவன் கையால்
அவள் கூந்தலில் குடியேறி
விடுவேனோ..?
இல்லையேல் இவனுடைய
கல்லறையில் வைத்துக்கொள்வானோ?
என்றெல்லாம் எண்ணத்தொடங்கியது...
ஆயிரம் ஆசைகளும் காதலும்
என்னுள் இருந்து முதல் வார்த்தை
எழுதமுடியவில்லை... ஆரம்பித்தேன்...
"மன்னிப்பாயா" என...
விரல் நடுவில் பேனாவும்
தன்னிலை மாறாமல் அப்படியே...
இறந்து போன ரோஜாவோ
காய்ந்து கருகப்போகிறோமா?
அவள் கைசென்று
நசுங்கிவிடுவோமா?
இல்லை அவன் கையால்
அவள் கூந்தலில் குடியேறி
விடுவேனோ..?
இல்லையேல் இவனுடைய
கல்லறையில் வைத்துக்கொள்வானோ?
என்றெல்லாம் எண்ணத்தொடங்கியது...
ஆயிரம் ஆசைகளும் காதலும்
என்னுள் இருந்து முதல் வார்த்தை
எழுதமுடியவில்லை... ஆரம்பித்தேன்...
"மன்னிப்பாயா" என...
நிர்ணயம்
கோபத்தின்
உச்சம் கண்ணீர்...
உணர்வுகளின்
உச்சம் காமம்...
விதியின்
உரிமை மீறலே காதல்...
உனக்கும் எனக்கும்
எந்தவொரு நிர்ணயமுமில்லதாது
நட்பு..
உச்சம் கண்ணீர்...
உணர்வுகளின்
உச்சம் காமம்...
விதியின்
உரிமை மீறலே காதல்...
உனக்கும் எனக்கும்
எந்தவொரு நிர்ணயமுமில்லதாது
நட்பு..
Friday 9 September 2011
பறக்கும் முத்தம்
அவளின் உதடுகள்
மெலிதாக பிதுங்கும்
ஓசையும் பூகம்பமாகுது
என் நெஞ்சில்...
மெல்லக் குவித்து
ஊதுவதும் சூறாவளியாகிறது...
பறக்கும் முத்தம்...
மெலிதாக பிதுங்கும்
ஓசையும் பூகம்பமாகுது
என் நெஞ்சில்...
மெல்லக் குவித்து
ஊதுவதும் சூறாவளியாகிறது...
பறக்கும் முத்தம்...
Thursday 8 September 2011
முட்டாள் காதலன்
அரிதாரம் பூச
தேவையில்லாத ஒரு முகம்...
மை பூசும் கண்கள்
பல நேரத்தில்
மனதையும் பேசும்...
எதிர்பார்ப்புகளோடு காண்கிறாளா
அல்லது
என்னை எட்ட நின்று
கவனிக்கிறாளா என
கணக்கிடமுடியாது...
முழம் போட்ட பூவை
தாளம் போட்டு ஆடச்செய்யும்
அவளின் கூந்தல்...
சில நேரங்களில் அவள்
முனுமுனுப்பதுகூட ராகங்களாய் ஒலிக்கும்...
அந்த முட்டாள் காதலனுக்கு...
தேவையில்லாத ஒரு முகம்...
மை பூசும் கண்கள்
பல நேரத்தில்
மனதையும் பேசும்...
எதிர்பார்ப்புகளோடு காண்கிறாளா
அல்லது
என்னை எட்ட நின்று
கவனிக்கிறாளா என
கணக்கிடமுடியாது...
முழம் போட்ட பூவை
தாளம் போட்டு ஆடச்செய்யும்
அவளின் கூந்தல்...
சில நேரங்களில் அவள்
முனுமுனுப்பதுகூட ராகங்களாய் ஒலிக்கும்...
அந்த முட்டாள் காதலனுக்கு...
Wednesday 7 September 2011
நான் நீ
வா என அழைத்து
கை பிடித்தாய்
வாழ்க்கையில்...
என்னில் தொடங்கி
உன்னில் முடிந்து
நாமாக கலந்தது
நம் காதல்...
கை பிடித்தாய்
வாழ்க்கையில்...
என்னில் தொடங்கி
உன்னில் முடிந்து
நாமாக கலந்தது
நம் காதல்...
Tuesday 6 September 2011
அம்புலி வாழ்க்கை
நிலவுடன் முதல் சந்திப்பு...
அப்பொழுது அகவை நான்கு...
தமிழ் என் நாவில் நர்த்தனம் ஆட
நிலவினை ந்திலா என சொல்லுவேன்..
மடிமேல் என்னை வைத்து
அரியணை அமரச்செய்தால் அன்னை..
நிலவில் அமர்ந்து பாட்டி வடை சுட்டாள்
என ஆரம்பித்தாள் , குறுக்கிட்ட நான்
"வதய யாது வாந்துவா?" என,
காகத்தின் மேல் பழியிட்டு கதை தொடர்ந்தது...
ஆண்டுகள் உருண்டோடிய பின்
எனக்கு அகவை பதினாறு ஆக...
கரித்துக்கொண்டிருந்தாள் அன்னை
என் நடவடிக்கைகளை...
வெளிவந்த நான் தனிமையில்
நிலவும் தனிமையில்...
ஒளிகொடுத்தது என் பாதைக்கு...
உணர்ந்தேன் என்னை...
காலம் கடந்து முதிர்ந்தேன்...
அகவை அறுபதைக்கடந்து தளர்ந்தது...
அம்மா கூறியது நினைவுக்கு வந்தது
இறந்தால் எல்லாம் நிலவுக்குதான் செல்வோம்...
அவளைக் காணப்போகும் மகிழ்ச்சியில்
மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருந்தேன்..
நாமும் அம்புலி தான்
பௌர்ணமியாய் ஜனனம்
அமாவாசையாய் மரணம்...
Sunday 4 September 2011
குடைக்குள் மழை
இலைகள் இழந்த மரக்கிளையை
போல் மின்னல்கீற்று...
கருஞ்சேலையான வானத்தைக்
துகிலுரித்துச் செல்ல..
வான்மகள் அழத்தொடங்கினாள்...
மானம் காக்க இடியாய்
கதற ஆரம்பித்தாள்...
எதையும் கேக்காத கிருஷ்ணா
குடை பிடித்து நடக்க ஆரம்பிக்க...
தன்னைத் தனித்துவிட்ட
ராதையை நினைத்து அழத்தொடங்கினான்...
குடைக்குள் மழையாய்..
போல் மின்னல்கீற்று...
கருஞ்சேலையான வானத்தைக்
துகிலுரித்துச் செல்ல..
வான்மகள் அழத்தொடங்கினாள்...
மானம் காக்க இடியாய்
கதற ஆரம்பித்தாள்...
எதையும் கேக்காத கிருஷ்ணா
குடை பிடித்து நடக்க ஆரம்பிக்க...
தன்னைத் தனித்துவிட்ட
ராதையை நினைத்து அழத்தொடங்கினான்...
குடைக்குள் மழையாய்..
மலர்
கையில் ரோஜாவுடன் நிற்க
மௌனமாய் கோபித்தாள்
மெல்லத் திரும்பினாள்
பூவை நானே வைக்க வேண்டும் என...
பூத்து இறந்த பூவும்
காதல் பூத்திட உதவியது...
மௌனமாய் கோபித்தாள்
மெல்லத் திரும்பினாள்
பூவை நானே வைக்க வேண்டும் என...
பூத்து இறந்த பூவும்
காதல் பூத்திட உதவியது...
Saturday 3 September 2011
அன்று
எந்தவித கவலையுமில்லை..
அன்பான சுற்றம்...
வேண்டுதல் இல்லை
ஆனாலும் மண்சோறு....
நீண்டதூர தள்ளுவண்டிப் பயணம்...
உண்ணாவிரத போராட்டம்...
விதிகளில்லை...கேள்விகளில்லை...
கேள்விகளுக்கு பதிலளிக்க விதிகளில்லை...
அவளின் முத்தங்கள் இல்லாத நாளில்லை...
உலகமே அவளது மடியில்...
அவளும் மழலையாய் மாறினாள்
என்னுடன் விளையாடி...
வண்ணமயமான மழலைக்காலம்...
அன்பான சுற்றம்...
வேண்டுதல் இல்லை
ஆனாலும் மண்சோறு....
நீண்டதூர தள்ளுவண்டிப் பயணம்...
உண்ணாவிரத போராட்டம்...
விதிகளில்லை...கேள்விகளில்லை...
கேள்விகளுக்கு பதிலளிக்க விதிகளில்லை...
அவளின் முத்தங்கள் இல்லாத நாளில்லை...
உலகமே அவளது மடியில்...
அவளும் மழலையாய் மாறினாள்
என்னுடன் விளையாடி...
வண்ணமயமான மழலைக்காலம்...
Friday 2 September 2011
ஏக்கம்
அகல விரிந்த இந்த நிலப்பரப்பில்...
கலைத்துவிட்ட கருங்கூந்தல் போல
முகில்கள் கலைந்திருக்க...
சல்லடையாய் கொட்டும் மாரியில்
ஒருதுளி அளவாவது அவள் காதல்
இருக்காதா என ஏங்குகிறேன்
பதில் தெரிந்துருந்தும்...
கலைத்துவிட்ட கருங்கூந்தல் போல
முகில்கள் கலைந்திருக்க...
சல்லடையாய் கொட்டும் மாரியில்
ஒருதுளி அளவாவது அவள் காதல்
இருக்காதா என ஏங்குகிறேன்
பதில் தெரிந்துருந்தும்...
Thursday 1 September 2011
விடை தேடி
விடை சொல்ல விழைந்தேன்
உன் கண்ணீருக்கு...
விடை தெரிந்தும் மறுத்தேன்
என் காதலுக்கு...
விடை தேடி அலைவது
உன் காதலுக்கும்
அதற்கு காரணியான
என் காதலுக்கும்...
உன் கண்ணீருக்கு...
விடை தெரிந்தும் மறுத்தேன்
என் காதலுக்கு...
விடை தேடி அலைவது
உன் காதலுக்கும்
அதற்கு காரணியான
என் காதலுக்கும்...
Wednesday 31 August 2011
கையேந்திபவன்
இயற்றப்பட்ட சட்டங்கள்
கொடுத்த கோரிக்கைகள்
அறிவிக்கப்பட்ட சலுகைகள்
அரசின் ஆணைகள்
இன்னும் எத்தனையோ...
மக்கள் கைகளை ஏந்திய
நிலையிலேயே வாழ்கின்றனர்..
எதுவும் இன்னும் கிட்டவில்லை...
கையேந்திபவனா நம் நாடு...
இலவசங்களின் வசமாகிவிட்டனர்...
உரிமைகள் மட்டும்தான் பறிக்கப்படவில்லை...
அதற்கும் ஒரு காலம் வரும்...
இரண்டாம் சுதந்திரப் போராய்...
கொடுத்த கோரிக்கைகள்
அறிவிக்கப்பட்ட சலுகைகள்
அரசின் ஆணைகள்
இன்னும் எத்தனையோ...
மக்கள் கைகளை ஏந்திய
நிலையிலேயே வாழ்கின்றனர்..
எதுவும் இன்னும் கிட்டவில்லை...
கையேந்திபவனா நம் நாடு...
இலவசங்களின் வசமாகிவிட்டனர்...
உரிமைகள் மட்டும்தான் பறிக்கப்படவில்லை...
அதற்கும் ஒரு காலம் வரும்...
இரண்டாம் சுதந்திரப் போராய்...
Monday 29 August 2011
கனவுகள்
உறங்குபவனின் கனவுகள்
விழித்துக்கொண்டால்
அதுவே நம்பிக்கையாகவும்
வெற்றியாகவும் மாறும்...
உறக்கம் கலையாத
மனிதன் விழுத்துக்கொண்டால்
மட்டுமே இது சாத்தியம்...
உனது விருப்பு வெறுப்பு
அனைத்தையும் உலகத்திடம் காட்டு...
உலகம் உனதாகும்...
விழித்துக்கொண்டால்
அதுவே நம்பிக்கையாகவும்
வெற்றியாகவும் மாறும்...
உறக்கம் கலையாத
மனிதன் விழுத்துக்கொண்டால்
மட்டுமே இது சாத்தியம்...
உனது விருப்பு வெறுப்பு
அனைத்தையும் உலகத்திடம் காட்டு...
உலகம் உனதாகும்...
Sunday 28 August 2011
பசி
இல்லாதவனை யாசகனாக..
இருக்கின்றவனை ஆண்டவனாக...
முயலாலாதவனை திருடனாக...
முயன்றவனை வெற்றியாளனாக...
கவலைகளுக்கு கல்லில் உருவம் தந்து
கோரிக்கைகளை வைக்கிறது...
இருதயங்களை உயிருடன்
அறுவை செய்கிறது...
மனிதனையே அடிமையாக்குகிறது
பசி...
இருக்கின்றவனை ஆண்டவனாக...
முயலாலாதவனை திருடனாக...
முயன்றவனை வெற்றியாளனாக...
கவலைகளுக்கு கல்லில் உருவம் தந்து
கோரிக்கைகளை வைக்கிறது...
இருதயங்களை உயிருடன்
அறுவை செய்கிறது...
மனிதனையே அடிமையாக்குகிறது
பசி...
சத்தம்
எனது இருதயம்
உன் வலப்புறம் துடிக்க...
உனது இருதயம்
என் இடப்புறம் துடிக்க..
இருவரின் துடிப்பும்
ஒன்றாய் கூவியது...
முத்தச்சத்தங்களாய்..
உன் வலப்புறம் துடிக்க...
உனது இருதயம்
என் இடப்புறம் துடிக்க..
இருவரின் துடிப்பும்
ஒன்றாய் கூவியது...
முத்தச்சத்தங்களாய்..
Wednesday 24 August 2011
முகம்
மற்றவர்களை மகிழ்விக்கும்
ஒருவனின் வாழ்க்கையை
கவனித்தால்...
அவனுடைய ஒவ்வொரு
சிரிப்புக்கு பின்
ஆறாத ரணங்களே அதிகமிருக்கும்...
பிறர் மகிழ்வுக்காக வாழ்வதில்
அவர்களின்
வாழ்வும் மகிழ்ச்சியும் தொடரும்...
ஒருவனின் வாழ்க்கையை
கவனித்தால்...
அவனுடைய ஒவ்வொரு
சிரிப்புக்கு பின்
ஆறாத ரணங்களே அதிகமிருக்கும்...
பிறர் மகிழ்வுக்காக வாழ்வதில்
அவர்களின்
வாழ்வும் மகிழ்ச்சியும் தொடரும்...
Tuesday 23 August 2011
முதல் நாள்...
வெறுப்புகள் உச்சகட்டத்தை அடைந்து
காண்பவரெல்லாம் எதிரிகளாகவும்
விரோதிகளாக...
மகிழ்வாக இருப்பவனைக் கண்டு
வந்த வெறுமை...
ஆழிப்பேரலை போல் வந்த ஆத்திரம்...
உணவை வெறுத்த பசி...
தனிமையில் வந்த கண்ணீர்...
உறங்க முடியாத இரவு...
இப்படியே நகர்ந்தது
அவள் என்னை விட்டுச்சென்ற
முதல் நாள்...
காண்பவரெல்லாம் எதிரிகளாகவும்
விரோதிகளாக...
மகிழ்வாக இருப்பவனைக் கண்டு
வந்த வெறுமை...
ஆழிப்பேரலை போல் வந்த ஆத்திரம்...
உணவை வெறுத்த பசி...
தனிமையில் வந்த கண்ணீர்...
உறங்க முடியாத இரவு...
இப்படியே நகர்ந்தது
அவள் என்னை விட்டுச்சென்ற
முதல் நாள்...
Monday 22 August 2011
என் தமிழ்
ழகரத்தில் வரும்
மொழி அழகும்
கிழவன் கிழவி
கிளவிகளும்..
என் தமிழுக்கே சொந்தம்...
வல்லின மெல்லின இடையினமாய்
தமிழ் , அம்மா , காதல்
என எல்லாம் என் தமிழுக்கே சொந்தம்...
மருந்துகள் இல்லாத காலத்திலே
மாத்திரை கணக்கிட்டது
என் தமிழுக்கே சொந்தம்...
கோடித் தமிழர் இருந்தாலும்
என் தமிழ் என சொல்லுவதே
என் தமிழுக்கு சொந்தம்...
கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தில் தோன்றியதும்..
கல்தோன்றிய பின் கல்வெட்டுக்களாய் தோன்றியதும்
என் தமிழே...
ஆங்கிலேயனும் அமெரிக்கனும் கற்றுக்கொள்கிறான்
என் தமிழுக்காக...
பகுத்தாறிவாளனும் இறையான்மை எழுதுவான்
என் தமிழுக்காக...
என் உயிரும் தமிழ்...
என் மெய்யும் தமிழ்...
உயிர்மெய்யும் தமிழ்...
அமிழ்தம் அருந்தியது தமிழ்...
சாகாவரம் பெற்றது என் தமிழ்...
உலகப்பொதுமறையும் என் தமிழ்...
உலகு மறையும் வரை மாளாது என் தமிழ்...
மொழி அழகும்
கிழவன் கிழவி
கிளவிகளும்..
என் தமிழுக்கே சொந்தம்...
வல்லின மெல்லின இடையினமாய்
தமிழ் , அம்மா , காதல்
என எல்லாம் என் தமிழுக்கே சொந்தம்...
மருந்துகள் இல்லாத காலத்திலே
மாத்திரை கணக்கிட்டது
என் தமிழுக்கே சொந்தம்...
கோடித் தமிழர் இருந்தாலும்
என் தமிழ் என சொல்லுவதே
என் தமிழுக்கு சொந்தம்...
கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தில் தோன்றியதும்..
கல்தோன்றிய பின் கல்வெட்டுக்களாய் தோன்றியதும்
என் தமிழே...
ஆங்கிலேயனும் அமெரிக்கனும் கற்றுக்கொள்கிறான்
என் தமிழுக்காக...
பகுத்தாறிவாளனும் இறையான்மை எழுதுவான்
என் தமிழுக்காக...
என் உயிரும் தமிழ்...
என் மெய்யும் தமிழ்...
உயிர்மெய்யும் தமிழ்...
அமிழ்தம் அருந்தியது தமிழ்...
சாகாவரம் பெற்றது என் தமிழ்...
உலகப்பொதுமறையும் என் தமிழ்...
உலகு மறையும் வரை மாளாது என் தமிழ்...
சுழற்சி
அது ஒரு பௌர்ணமி இரவு...
அம்மாவின் மூக்குத்தியும்
அம்புலியும் ஒரு சேர ஒளிர்ந்தது...
வீட்டுத் திண்ணையில்
நானும் அவளும்...
அம்மா சொன்னாள்
காக்கா நரி கதையை...
பழகிப்போனது என்றாலும்
அவள் மடியில் அமர காரணமாய் இருந்தது...
தாத்தா சொன்னது நீதிநெறி கதையில் ஒன்றான
விவேகானந்தரின் பிச்சைக்கார அரசனை..
பாட்டி சொன்னாள்
குழல் பிடித்த கண்ணன் கதையை...
நர்த்தனம் ஆடினானாம் பாம்பின் மேல்...
வருடங்கள் உருண்டோடிய பின்
பக்கத்து வீட்டு அக்காவின்
குழந்தையை காண சென்றேன்..
அடுப்படியில் அக்கா நிற்க
குழந்தை தனியாய்
கதை கேட்டுக்கொண்டிருந்தான்...
5.1 டிஜிட்டல் டிவிடியில்...
அம்மாவின் மூக்குத்தியும்
அம்புலியும் ஒரு சேர ஒளிர்ந்தது...
வீட்டுத் திண்ணையில்
நானும் அவளும்...
அம்மா சொன்னாள்
காக்கா நரி கதையை...
பழகிப்போனது என்றாலும்
அவள் மடியில் அமர காரணமாய் இருந்தது...
தாத்தா சொன்னது நீதிநெறி கதையில் ஒன்றான
விவேகானந்தரின் பிச்சைக்கார அரசனை..
பாட்டி சொன்னாள்
குழல் பிடித்த கண்ணன் கதையை...
நர்த்தனம் ஆடினானாம் பாம்பின் மேல்...
வருடங்கள் உருண்டோடிய பின்
பக்கத்து வீட்டு அக்காவின்
குழந்தையை காண சென்றேன்..
அடுப்படியில் அக்கா நிற்க
குழந்தை தனியாய்
கதை கேட்டுக்கொண்டிருந்தான்...
5.1 டிஜிட்டல் டிவிடியில்...
Sunday 21 August 2011
மழை வெயில் காதல்
மழை வரும் நேரத்தில்
நான் குடை பிடித்தால்...
குடையைத் தட்டிவிட்டு
என் மார்போடு சாய்ந்து நனைகிறாள்...
இதுதான் காதல் என்று...
அன்று நான்
வெயிலில் வியர்வையால் குளித்து
உன்னைக்கண்ட பொழுது...
உன் உதட்டுச்சாயம் துடைத்த
உன் கைக்குட்டையில்...
என் முகம் துடைத்து
எண்ணிலா முத்தங்கள் தந்தாயே...
இதுவும் காதல்தான் என்று...
நான் குடை பிடித்தால்...
குடையைத் தட்டிவிட்டு
என் மார்போடு சாய்ந்து நனைகிறாள்...
இதுதான் காதல் என்று...
அன்று நான்
வெயிலில் வியர்வையால் குளித்து
உன்னைக்கண்ட பொழுது...
உன் உதட்டுச்சாயம் துடைத்த
உன் கைக்குட்டையில்...
என் முகம் துடைத்து
எண்ணிலா முத்தங்கள் தந்தாயே...
இதுவும் காதல்தான் என்று...
Subscribe to:
Posts (Atom)