எந்தவித கவலையுமில்லை..
அன்பான சுற்றம்...
வேண்டுதல் இல்லை
ஆனாலும் மண்சோறு....
நீண்டதூர தள்ளுவண்டிப் பயணம்...
உண்ணாவிரத போராட்டம்...
விதிகளில்லை...கேள்விகளில்லை...
கேள்விகளுக்கு பதிலளிக்க விதிகளில்லை...
அவளின் முத்தங்கள் இல்லாத நாளில்லை...
உலகமே அவளது மடியில்...
அவளும் மழலையாய் மாறினாள்
என்னுடன் விளையாடி...
வண்ணமயமான மழலைக்காலம்...

No comments:
Post a Comment