இலைகள் இழந்த மரக்கிளையை
போல் மின்னல்கீற்று...
கருஞ்சேலையான வானத்தைக்
துகிலுரித்துச் செல்ல..
வான்மகள் அழத்தொடங்கினாள்...
மானம் காக்க இடியாய்
கதற ஆரம்பித்தாள்...
எதையும் கேக்காத கிருஷ்ணா
குடை பிடித்து நடக்க ஆரம்பிக்க...
தன்னைத் தனித்துவிட்ட
ராதையை நினைத்து அழத்தொடங்கினான்...
குடைக்குள் மழையாய்..

No comments:
Post a Comment