எடுத்து வைத்த தாள்
விரல் நடுவில் பேனாவும்
தன்னிலை மாறாமல் அப்படியே...
இறந்து போன ரோஜாவோ
காய்ந்து கருகப்போகிறோமா?
அவள் கைசென்று
நசுங்கிவிடுவோமா?
இல்லை அவன் கையால்
அவள் கூந்தலில் குடியேறி
விடுவேனோ..?
இல்லையேல் இவனுடைய
கல்லறையில் வைத்துக்கொள்வானோ?
என்றெல்லாம் எண்ணத்தொடங்கியது...
ஆயிரம் ஆசைகளும் காதலும்
என்னுள் இருந்து முதல் வார்த்தை
எழுதமுடியவில்லை... ஆரம்பித்தேன்...
"மன்னிப்பாயா" என...
No comments:
Post a Comment