Thursday, 8 September 2011

முட்டாள் காதலன்

அரிதாரம் பூச
தேவையில்லாத ஒரு முகம்...
மை பூசும் கண்கள்
பல நேரத்தில்
மனதையும் பேசும்...
எதிர்பார்ப்புகளோடு காண்கிறாளா
அல்லது
என்னை எட்ட நின்று
கவனிக்கிறாளா என
கணக்கிடமுடியாது...
முழம் போட்ட பூவை
தாளம் போட்டு ஆடச்செய்யும்
அவளின் கூந்தல்...
சில நேரங்களில் அவள்
முனுமுனுப்பதுகூட ராகங்களாய் ஒலிக்கும்...
அந்த முட்டாள் காதலனுக்கு...

No comments:

Post a Comment