அரங்கநாதன் கோலத்தில்
அவள் வீற்றிருக்க...
அவள்பதம் தொட்டேன்...
என் கைவசம் அவளின்
கால்கள் தஞ்சம் புகுந்தது...
நான் செய்த பாவங்களும்
புண்ணியமாயின போலும்...
என்கைப்பதம் அவளின்
கால்களில் விளையாட...
விரலுக்கு சொடுக்கெடுக்க
விடுதலையடைந்தது வலிகள்...
அயர்ந்த அவள்
கண்ணுறங்கிப் போனாள்...
என் தாய் உறங்கியபின்
தாய்மையை உணர்ந்தேன்
என்னிடம்...

No comments:
Post a Comment