நட்ட மரத்தை வெட்டியாச்சு...
வெட்டிய மரத்த வித்தாச்சு...
காத்துல கரியமிலம் கலந்தாச்சு...
கார்பன் மோனாக்சைடும் சேந்தாச்சு...
ஓசோன்ல ஓட்டைய போட்டாச்சு...
எல்லாத்தையும் ஆட்டையப் போட்டாச்சு...
குடிதண்ணியும் காசாச்சு...
இனி உள்ளபோற காத்தும் காசாகும்...
அணு உலைகள் வச்சா
அணுதினமும் ஆபத்துதாகும்...
கட்டுக்கட்டா சேத்த பணம்
நீ கட்டையில போகும்போது வருமா..?
இயற்கைய நீ அழிச்சா
உன் சந்ததிய அது சும்மா விடுமா?

1 comment:
அருமையான கவிதை
Post a Comment