பாடிப்பறக்கும் பச்சைக்கிளி
கட்டைப்பெட்டியில் உள்ளே
எடுக்கும் சீட்டுதான்
உன் எதிர்காலமா?
ஏழு மிளகாயும்
அதன் கீழிருக்கும்
எலுமிச்சையும் உனக்கு நன்மையா?
உனக்கும் நாய்க்கும்
திருமணம் செய்தால்
மாரி பொழிந்துவிடுமோ?
ரேகைகள் மட்டும் வாழ்க்கையெனில்
கரம் இல்லாதவனுக்கு வாழ்க்கை இல்லயா?
உன்மேல் உனக்கில்லாத
நம்பிக்கைதான் இத்தனை
அவலங்களுக்கும் ஆரம்பம்...
யோசித்துப்பார் தோழா...

No comments:
Post a Comment