நாம் இருப்பது...
இறவாத நேரங்களில் மட்டுமே
நமக்கு ஏன் பிறந்தோம்
என்று சிந்திக்க வைக்கும்
உலகம் ...
உறங்காத நேரங்களில்
உறக்கத்தைப்பற்றி உத்தேசம்
வழங்கும் மனிதர்கள் கொண்ட
உலகம் ...
நட்பு காதல் பாசம்
என அனைத்தையும்
பகுத்துப்பார்க்க தெரியாத உலகம்...
உண்டி சுருங்கி...
உடலுடன் எலும்பு தெரியும்அனேக மக்களும்...
நான்கு பேர் கொண்ட
குடும்பத்திற்கு...
இருபத்தி நான்கு அடுக்கு மாளிகை
கட்டி வாழும் ....
பண மனிதன் வாழும் உலகம்...
இதுவரை விளக்கமே கிடைக்காத
காதலுக்கு...
விளக்கங்களும் விவரங்களும்
அள்ளித்தரும்...
ஆச்சரிய உலகம் ...
இதெல்லாம் நிறைந்ததால்தான்...
இது நமக்கு உலகமாகவே தோன்றுகிறது...
No comments:
Post a Comment