Tuesday 7 June 2011

சிறகொடிந்த பறவை


எதிர் வீட்டு அண்ணா...
அம்மா ஒடம்பு சரியில்லமா...
நாளைக்கு போறேன்மா ஸ்கூலுக்கு...
பக்கத்து வீட்டு தம்பி...
அப்பா எனக்கு காய்ச்சலா இருக்கு...
ஸ்கூலுக்கு நாளைக்கு போறேன்ப்பா...
அடுத்த வீட்டு அக்கா...
அம்மா நான் வீட்டுப்பாடம் பண்ணல...                                       
போகல ஸ்கூலுக்கு...
இவளோ...
அம்மா...நேரம் ஆச்சு...
சீக்கிரம்...
அனைவரும் கிளம்பினர் பள்ளிக்கு...


இவளோ...
தனது தூக்குச்சட்டியைத் தூக்கிக்கொண்டு
கிளம்பினாள்...
சிறகொடிந்த பறவையாய் 
கட்டிட வேலைக்கு...

No comments:

Post a Comment