Thursday 30 June 2011

என் அழகிய கள்ளி...


எனக்கும் அவளுக்குமான 
சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது..
நீதான் காரணம்...
இல்ல நீதான் காரணம்...
எங்கள் விவாதம் 
தொடர்ந்து கொண்டே போனது...
விவாதம் முற்றினால்,..
கைகலப்பு...
அருமையான ஒரு அடியுடன் அரங்கேறியது...
இப்படியே செல்ல..
கோபத்தில்...
அணைத்து...தந்தேன் ஒரு முத்தம்...
அமைதியானாள்...
அடுத்த நாள்...
சந்தித்த முதல் நிமிடத்திலேயே...
சண்டை போட தயாரானாள்...
என் அழகிய கள்ளி...

No comments:

Post a Comment