அவளின் நாணம்.
கால் விரல்கள்
தரையில் கோலம் இடவில்லை...
விரல் நகங்கள் அவளின்
வெள்ளை சுவரின் இடையில்
மறியல் செய்யவில்லை..
என்னை உற்று நோக்கும்
கண்களும் அவளின் சிரமும்
கீழ்செல்லவில்லை...
இருந்தும் புரிந்தது எனக்கு
அவளின் நாணம்...
என்னை முத்தமிட்டு
அவளின் உதட்டை அவளே
தொட்டு சிரித்தபொழுது...
No comments:
Post a Comment