முதல் முத்தம்...
அன்று...
அது ஒரு அழகிய மாலை...
செங்கதிர் சூரியன் சுட்டெரிக்காமல்...
வண்ணத்துப்பூச்சிக்கு குளிர் எடுத்தால்
அதை அடக்கும் ஒரு வெப்பத்தில்...
ஆங்காங்கே இருந்த மரங்களின்
சருகுகள் அவளின் கால் கொலுசின்
ஒலியை காற்றில் பரப்பிக்கொண்டிருந்தது...
அவளின் வருகைக்கு அறிகுறியாய்...
அங்கே இருந்த குயில் ஒன்று
ஆலாபனை செய்ய...
தேவதையின் க்ளோனிங் போல் வந்தால்...
எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடு
என் உதட்டின் வழியே சிரிப்பாய் மலர...
அருகில் அமர்ந்த அவளிடம் ஆரம்பித்தேன் அரட்டையை...
சற்றும் எதிர்பாராமல் இருக்க...
காதலின் பரிசாய் விரலுக்கு மோதிரம்...
அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் முன்னர்...
அழகாய் கன்னத்தில் தந்த முத்தம்...
என்றும் நினைவில்...
No comments:
Post a Comment