உயிரணுவிற்கு உதிரம் சொட்ட செய்தவள்...
உயிருக்குள் உயிர் சுமந்தாள்...
கண் விழித்தாலும் நீதான்...
நா விளித்தாலும் நீதான்...
பஞ்சு மெத்தையும் பளிங்கு அறையும்
வேண்டாத எனக்கு...
உன் பட்டு மடியும்...முடி கோதும் விரலும்
அந்த நிமிடமும் சொர்க்கம்..
ஆயிரம் ஆலாபனைகள் ஆண்டவனுக்கு..
கடவுளே பாடும் ஆலாபனை எனக்கு...
அசந்து உறங்கிய பின்...
அவள் தரும் அரவணைப்புக்கு அவளே நிகர்...
இடறி விழுந்தாலும்...
இடர் நேர்ந்து அழுதாலும்...
நான் அழைப்பது உன்னையே...
உலகில் இருக்கும் தூய்மையான
அன்பு...அதில் உனக்கும் பங்கு...
இது எனக்கு மட்டுமல்ல...
அனைத்து உயிருக்கும்...
சமர்ப்பணம்
என் அன்னைக்கு....
No comments:
Post a Comment