எதுவுமே நிரந்தரம் இல்லாத
என் வாழ்வில்
காதல் மட்டும் என்ன
சிம்மசொப்பனமா...
அதுவும் அப்படிதான்....
முதலில் நீ
உன் கால் கொலுசு
பின் உன் கண்கள்
உன் அன்பு ஆறுதல்
உன் வீடு உன் தாய் தந்தை
என தொடர்ந்து
இப்பொழுது இந்த உலகத்தையும் சேர்த்து
காதலித்துக்கொண்டு இருக்கிறேன்...
எனக்காக உன்னை அது சுமப்பதால்...
No comments:
Post a Comment