Friday 29 July 2011

காதல் "விழுப்புண்"

என் பெயர் நீ சொல்லி
குறுநகை செய்தாய்...
உன் பெயர் நான் சொல்ல
புன்னகைகள் பூத்தாய்...
இதயம் பொங்கிவழியும் அன்பு நீ பொழிய...
மூச்சுமுட்டும் வரை அன்பை நான் பெற்றேன்...
எதையும் எதிர்பாராமல் நீ இருக்க...
என்னுள் வாழும் முட்டாளின் மூளை குழம்ப...
அவன் வென்று...நான் தோற்க...
வெற்றியின் விளைவாய்...
காதலை அவன் என்னுள் பதிய...
தவறும் தோல்வியும் காதலுக்கு நீரூற்ற...
எப்படியோ காதல் வளர்த்தேன்...
அன்றே முடிவு செய்தேன்...
இன்னொரு தோல்வியும் காத்திருக்கிறது என்று...
எதிர்பார்த்ததுபோல் அனைத்தும் நடந்தது...
உன் வாழ்வும் என் வாழ்வும்
நிர்ணயிக்கப்பட்டது போல் தனியே செல்ல...
மார் மீது பாய்ந்த காதல் ஈட்டி...
இதயம் கிழித்ததோ எனக்கு...
தோல்வியுடன் வாழ்கின்றேன்...
என் காதல் "விழுப்புண்" உடன்...

No comments:

Post a Comment