புகைந்தோ புதைந்தோ போகிறவன் வாயிலும் புகை-சிகரெட்...
நீர் அருந்துகிறேன் அளவுக்கு அதிகமாய் அழுவதற்கு...
உனக்கு முத்துப்பற்கள்தான்..அதற்காக பேசக்கூடவா மாட்டாய்-திமிர்க்காரி...
விபத்தில் அடிப்பட்ட குழந்தை இறந்தபின் வாகனத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் இறைவன் நிழற்படமாய்...
முடியப்போகும் வாழ்க்கை வெட்டிவிட்டே ஆரம்பிக்கிறது தொப்புள்கொடியில்...
இமையாய் உன் இதழும் விழியாய் என் இதழும்...
சிறைக்குப் பின் பூங்காற்றாய் ஜன்னலுக்குப்பின் அவள்...
தோல்வியை நீ மறுத்தால்,வெற்றி உன்னை மறுத்துவிடும்...
"ம்ம்ம்" உன்னால் பிடித்துப்போன புதிய தமிழ்ச்சொல்.
தனக்கும் பூட்டு உண்டியலுக்கும் பூட்டு,ஊரைக்காக்குமாம் சாமி...
உனக்கும் உரிமையில்லை காரணம் இது என் காதல்.
முதுகில் புத்தகம் மூளையில் அவள்-பள்ளிப்பருவக்காதல்.
மதம் பரப்புவனிடம் சென்று கேட்க வேண்டிய ஒரு கேள்வி...என்று நீ மனிதத்தை பரப்புவாய்?
No comments:
Post a Comment