வீதிமுழுதும் வண்ணத் தோரணங்களும்
விளம்பரப்பலகையில் உன் முகமும்
பச்சை மாவிலைத் தோரணமும்
பக்கத்தில் சாய்ந்திருந்த வாழைமரமும்...
பத்து வீட்டுக்குள் சந்தோசக் கூச்சலும்
பக்கத்து ஊருக்கும் கேட்கும் ஒலிபெருக்கியும்
பேருந்து நிறுத்தங்களில் சொந்தங்களும்...
நேற்றுத்தடவிய சந்தனமும்
அதற்குத் துணையாய் ரத்தச்சந்தனமும்...
பல பந்தி செல்லும் உறவுகளும்
உன் அப்பன் பெருமை பேசும் மக்களும
நடந்துமுடிந்த சடங்குகளும்
இனி நடக்கப்போகும் சடங்குகளும்...
லட்சம் லட்சமாய் வரதட்சணையும்
லட்சணமான சிரிப்புடன் என் தங்கமும்...
அடித்துச்சொல்லுதடி இந்த உலகிற்கு
மகிழ்வாய் நடக்கும் உன் திருமணத்தை...
காத்திருந்த முட்டாளும்
அக்கினிக் குண்டத்தில் கிடப்பானடி
அரைப்படி சாம்பலாய்....
சுற்றி வா மூன்று முறை,
வந்துவிட்டு உறுதிசெய்துகொள்
என்னை தலைமுழுகிவிட்டாயென
என் இன்னுயிர்த்தோழியே....
No comments:
Post a Comment