Wednesday 2 November 2011

காக்கிச்சட்டை கணபதிகள்

ஊரக்காக்க உன்ன விட்டா
உலை பொங்கும்போதே சோறக்கேக்குற...
இருக்குறவனுங்ககிட்ட கையேந்தி ...
இல்லாதவங்ககிட்ட கை நீட்டுற...
வீட்டுக்கு காவல் வச்சா
பூட்ட ஒடச்சு தேடுற...
குத்தவாளிக்கு கும்பிடு போட்டு
வங்கிக்கணக்க ஏத்துற...
கால் கட்டைவிரல பாக்கவே
காட்டுத்தனமா மூச்சுவிடுற...
மாசக்கடைசியில மண்டைய சொரியுற...
எவனாச்சும் வந்தா வழிப்பறி செய்யுற...
பல்லக்காட்டி பிச்சை எடுக்குற...
சத்தியப்பிரமாணம் எல்லாம் சரியா செய்யுற
சல்யூட் மட்டும் பணத்துக்காக அடிக்குற...
சாவுக்கு வந்தா நெத்திக்காசையும் திருடுற...
உன் உடைக்கான மரியாத உனக்குத் தெரியுமா?
ஊர் கூடி எடுத்துச்சொன்னா புரியுமா?

No comments:

Post a Comment