Thursday 3 November 2011

நித்திரைக்கு முன்...

ஒவ்வொரு இரவும்
உறங்கச்செல்லும் முன்
என்னிடம் எழும் கேள்வி...'

நாளையேனும் உனக்கான வாழ்க்கை
கிடைக்குமா?
எனக்கான வாழ்க்கை கிடைக்குமா?
எனக் கேட்டுக்கொண்டே தூங்கச்செல்லுது
இந்த உறங்கா மனது...

என் கண்கள் குளமான பின்னர்
நனைந்திடா வேண்டாம் என் தலையணை
என கண்கள் நினைக்க...

துடைத்துவிடலாம் என்று உதவ
வரும் என் கரங்களில்
நேற்று துடைத்த கண்ணீரின்
ஈரம் இன்னும் காயாமல் இருக்க...
வற்றிப்போகுது என் வார்த்தைகள்...

அழுகுரல் கேட்டுவிடக்கூடாது என
எத்தனை முறை முயன்றாலும்...
தோற்றுப்போகிறேன் நான்...

கண்கள் அயர்ந்தால் மட்டுமே எனக்கு
தூக்கம் எனத்தெரிந்து கொண்டபின்...
பழகிவிட்டது அழுகையும் காரணங்களும்...
அதனால் நான் பெற்ற ரணங்களும்...

உறங்கி எழுந்தபின் உதடுகள்
சொல்லத்துடித்தாலும்,உதவ மறுக்கும் மூளை...
எனக்கான காலை என்று விடியும்???


No comments:

Post a Comment