Wednesday 9 November 2011

உடலெங்கும் உன் முத்தம்

வெட்டவெளியில் வெண்ணிற ஆடையில்
துச்சமில்லாமல் சென்று கொண்டிருந்தேன்..
அறிவிப்பின்றி நீ வருவாய் என
எதிர்பாராமல் நடந்துசெல்ல
ஆர்ப்பரித்துக்கொண்டு என்னருகே வந்தேய்...

என் உச்சி நீ தொட்டு
என் உள்ளமும் உள்ளும்
குளிரச்செய்து....
எல்லை மீற ஆரம்பித்தாய்...

விரல்தொட்டாய் என விட்டுப்பார்த்தேன்...
நீ இதழ் தொட்டு...
என் ரோமம் பிடித்து
என்னுள் நீ உட்செல்ல...
எங்கிருந்தோ இருந்து எட்டிப்பார்த்தது
என்னுள் ஒளிந்திருந்த வெட்கம்...

என்னைக் காப்பாற்ற நான் முயல...
என் காதில் நீ முத்தமிட்ட ஈரம்
காயும்முன் மாறி மாறி முத்தங்கள்
பொழிந்து தள்ள...
என்னை மறந்தேன் நான்...

உடலெங்கும் உன் சுவடுகள்..
என்னை நீ ஆட்கொள்ள...
முற்றிலும் நனைந்திருந்தேன்
செல்ல மழையே ...

No comments:

Post a Comment