Tuesday 8 November 2011

கையாலாகாதவன்

நடுநிசி ஆசைகளும்
மரத்துப்போகுதடி...
வெடித்துவரும் கண்ணீரும்
வெளிவர மறுக்கிறதடி...
எனக்குத் துணையாய் மழையும் அழுகிறதடி...
உன் விரல் பிடித்த நிமிடங்களை...
என் கண்ணில் நீ
உனைப் பார்த்த நிமிடங்களை...
வந்து வந்து போகுதடி உன் எண்ணம்...
விட்டுப்போய்விட்டாய் என்று உன்னை
விடவும் முடியவில்லை...
விட்டுச்சென்ற உன்னை வந்து
கேட்கவும் முடியவில்லை...
எனக்கான வாழ்க்கை எங்கே என?



No comments:

Post a Comment