Saturday 22 October 2011

அர்த்தநாரி

கோவிலுக்கு போய் நிக்குறாங்க
பிள்ளை வரம் கேக்குறாங்க

ஆணாய் பொறந்தா
ஆனந்தமா வளர்க்குறாங்க

உள்ளுக்குள்ள மாறுதல் வந்து
உள்ள இருக்க பெண்மையை
உணர்ந்தா
ஒதுக்கிவைக்க பாக்குறாங்க

படிக்கப்போனா அங்கயும் ஒதுக்கிவச்சு
ஒதுக்குப்புறமா வர சொல்லுறாங்க
கத்துக்க வந்த எடத்துல
கட்டில் காட்டி சிரிக்குறாங்க

ஒஸ்சுன்னு கூப்பிட்டு
ஒம்போதுனு கேலி பண்ணி
கைத்தட்டி கூப்பிட்டு
கண்ட இடத்துல கை வக்கீறாங்க...

கோவிலுக்கு மட்டும் போன
வாய் தொறந்து சொல்லுறாங்க
"அர்த்தநாரியப்பா என்ன நீதான் காப்பாத்தனும்"

No comments:

Post a Comment