Saturday 22 October 2011

எது காதல்?

முதுகுப்பையில் புத்தகங்கள்
கனத்திருக்க
கைபிடித்து நடந்துசென்ற
பருவம்வராக் காதல்...

புகைமண்டலம் கிளம்பி
மூச்சடைக்கும் சாலையில்
மூச்சிறைக்க ஓடி வந்து
படியில் இடம்பிடித்து
அவளின் மனதிலும் இடம்பிடித்த
பேருந்துக்காதல்...

பேருந்துக்கு இவள் காத்திருக்க
இவள் பதிலுக்காக அவன்
காத்திருக்கும் தினசரி
பேருந்து நிறுத்தக் காதல்...

நேற்று பெய்த மழையில்
குடைபிடித்து நடந்துவந்த அவளின்
அழகு கண்டு அவன் கொண்ட
அரை நொடிக் காதல்...

இணையத்தில் இவன் எழுத
இவன் எழுத்தினை இவள் ரசிக்க
எண்ணங்கள் பரிமாறிக்கொண்ட
முகம்காணா காதல்...

காதல் தோல்வியில் அவன் கசிந்துருக
கண்ணீர் துடைத்தபின் அவள்கொண்ட
அதிசயக்காதல்...

விளையாட்டாய் வாழ்வை நினைத்து
கட்டிலை மட்டும் பரிமாறிக்கொள்ளும்
சில கருமம்பிடித்த காதல்...

எது காதலென்றே தெரியாமல்
காதல்தான் உயர்ந்தது எனக்
கங்கணம் கட்டி
பெற்றோரையும் ஒதுக்கித்தள்ளும்
கிருக்கர்களின் காதல்

எழுதிவைத்தேன் என் மனதில்
எது என் காதல்?
எங்கே என் காதல்?

No comments:

Post a Comment