Saturday 22 October 2011

கடைசி கேள்வி

நிலவில் முதலில்
அமெரிக்கனா கால் வைத்தான்?

எதற்காக ஏழை பணக்காரன்
ஒப்பீடுகள் மக்களுக்குள்?

எதற்காக இந்த சமுதாயத்தில்
சாதி சமய ஏற்றத்தாழ்வுகள்?

பட்டுச்சேலையின் மீதும்
தங்க நகையின் மீதுமுள்ள மோகம்
பெண்களுக்கு என்றுதான் குறையும்?

மக்களுக்கு சோறு போட
முடியாத நாட்டில்
எதற்கு செவ்வாய் கிரக ஆராய்ச்சி?

எத்தனையோ கேள்விகள்
கேட்டுவிட்டேன்
கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்...

எத்தனை கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலும்
என் கடைசி கேள்வி இது...
என் சாவுக்கு அவள் வருவாளா?

No comments:

Post a Comment