Saturday 22 October 2011

தன்னுள் கோடி ஆசைகள்
அவனைக் காணும்போதெல்லாம்
தெரிவிக்கத் தூண்டும்
அவா அவளுக்கு...
நீயே என் உயிர்
இதயத்தில் தோன்றிய காதல் இது
உன் கண்களில் வாழ்ந்து பார்க்க ஆசை...
உன் விரல் பிடித்து அழ ஆசை...
உன் மடி மீது இறக்க ஆசை..
எனக்கான வாழ்வு உன்னுடன்
இந்த நெற்றியில் வரப்போகும்
குங்குமமும் உன் விரலால்தான்
என்றெல்லாம் தெரிவிக்க அவாக்கொள்கிறாள்...
கிடைத்த வாய்ப்புகளை எல்லாம்
பறிகொடுத்து விட்டாள்...
இன்றாவது தெரிவித்துவிட
வேண்டும் என்று முடிவு செய்து...
வெள்ளைத்தாள் எடுத்துத் தன்
வெள்ளை மனக்காதலை எழுதினாள்
காதலைக் கூற முடியாத
பேசா மடந்தை...

No comments:

Post a Comment