நான் எங்கோ பார்க்கும்பொழுது
எனை மட்டுமே பார்த்து...
என் பார்வை உன்னிடம்
திரும்பும்போது , வேறெங்கோ பார்த்தது...
ஏனடி...?
பிழை என்னிடம் இருந்தாலும்,
"நான் தான் இதற்கு
காரணம்" எனக்கூறியது...
ஏனடி..?
குறுஞ்செய்தி வரவில்லை என்றவுடன்
கோபம் காட்டியது
ஏனடி...?
எனக்கு காய்ச்சல் என்றவுடன்,
உண்ணா நோன்பு இருந்தாய்...
ஏனடி...?
அணைக்கும்பொழுது புன்முறுவல்
பூத்தாய், உதடுகளின் மீது
இதழ் பதித்தபோதெல்லம்
விழிகளில் மழை பொழிதாய்
ஏனடி...?
விடைபெறும் போதெல்லாம்
என் விரல் பிடித்தாய்
ஏனடி...?
இத்துனை நடந்தும் இன்று
நான் தனிமையில்.
ஏனடி..???
No comments:
Post a Comment