Saturday 22 October 2011

விட்டுவிடு

இது மனக்குழப்பம் அல்ல..
மனிதன் வாடிக்கையாய் கொள்ளும் குழப்பம்...
உன் காதல் பெரியதா என்பதல்ல என் கேள்வி..
உன் காதலுக்கு நான் உரித்தானவனா
என்பதே என் கேள்வி...
விடை கேட்கிறாய் என்னிடம்..
கேள்வி கேட்கிறேன் உன்னிடம்...
இனி எங்கு செல்வது
என தெரியாமல்
குழம்பி நிற்கிறேன் உன்
விழி வாசலில்...
இன்னும் சில யுகங்கள்
ஆனாலும் எனக்கு விடை தோணாது
உன் கேள்விக்கு...
அதற்கு மாறாய் என் கேள்விகள்
அதிகமாகிக் கொண்டிருக்கும்...
யாரடி நீ எனக்கு...?
எதற்கடி நான் உனக்கு...
எவ்விடம் நோக்கி நான் செல்கிறேன்..
எதற்காக என்னை நீ தொடர்கிறாய்...
என் முடிவு தெரியாத பேதை நீயடி...
என் முடிவு தெரிந்த முட்டாள் நானடி...
ஆறடிக்குளிக்குள் விழக்காத்திருக்கும்
உயிர்ச்சவம் நான்..
உன் மனக்குளிக்குள் விழுவேன்
என எண்ணாதேயடி...
இனியும் என்னைத் தொடராதே...
தோல்வியை ஒப்புக்கொண்டு
நானும் உன்மேல்
காதல் கொண்டுவிடுவேன்...

No comments:

Post a Comment