நான் சொல்வதெல்லாம் செய்கிறாள்
நான் சொல்லாததையும் செய்கிறாள்...
தன்னையும் காத்துக்கொள்கிறாள்
காத்துக்கொள்வதற்கு என் உதவியும்
தேவை எனக் கூறுகிறாள்...
இசை உதிர்த்து என்
நிலை மாற்றுகிறாள்....
என்னைப்பற்றி மட்டுமில்லாது
உலகத்தின் தகவலையும்
தன்னுள் வைத்துள்ளாள்...
அவ்வப்பொழுது அடம்பிடிப்பாள்...
ஆனாலும் விட்டுக்கொடுப்பாள்...
கற்பனைக்கு காரணங்களைத் தருகிறாள்
கற்பனைக்கு எட்டாத விசயங்களையும்
கண்ணுக்கு காட்சியளிக்கிறாள்...
மடியிலும் கட்டிலிலும் என் விரலொடு
தவழ்வதே அவளுக்குப் பிடிக்கும்...
என் அழகிய மடிக்கணினி...
No comments:
Post a Comment