வெற்றி தோல்விகளின்
களம் தான்
காதல்..
புன்னகைக்கும் கண்ணீருக்கும்
முகவரி தான்
காதல்...
அவளும் நீயும்
மட்டும்மல்ல
காதல்...
நீயும் நீ கொண்ட
தனிமையும்
காதல் தான்...
இருட்டில் வெளிச்சமும்
காதல்தான்...
கல்லாய் இருக்கும்
கடவுளும்
காதல்தான்...
ஆணும் பெண்ணும்
மட்டுமல்ல
காதல்...
தந்தை தமையனும்
தாயின் அன்பும்
காதல்தான்...
அவள் ஊட்டும்
பால்சோறும்
காதல்தான்...
இன்றும் நாளையும்
என்றும் காதல்தான்...
No comments:
Post a Comment