Tuesday 16 August 2011

அந்திப்பொழுது

முகில்கள் களைப்பாறும்
நேரம் அது...
மேற்க்கத்திய நாடுகளை நோக்கி
ஆதித்தன் அம்புலிக்கு
வழிவிட்டு செல்ல...
மாலைப்பொழுது மங்கிக்கொண்டு
இரவாகிக் கொண்டிருந்தது...
அவள் விரல் பிடித்து
நகம் கடித்துக்கொண்டிருந்த நேரம்...
நிமிடங்கள் கேட்பாரற்று ஓடிக்கொண்டிருக்க...
அவள் வெண்ணிற நெற்றியின்
கறுப்புப் பொட்டுக்கு எதிராய்...
உச்சியில் நிலவு வந்து நின்றது...
அவள் என் சிகை கோத...
கீழ் இமையைத் தேடி
மேல் இமை சென்றது...
கண் மூடி நான் கிடக்க...
காதல் புரிந்த தருணம் அது...


No comments:

Post a Comment