Thursday 11 August 2011

மௌனம்

இடைவிடாத இரு இருதயத்தின் துடிப்பு...
காற்றில் அலைபாய்ந்த சருகுகளின் சத்தம்...
அம்புலியை பிரதிபலித்த குளத்தில்
கல் விழுந்த ஓசை...
காலையில் சுற்றித்திரிந்த பறவைகள்
மரக்கிளையில் ஓய்வெடுக்க...
தன்னை மறந்து பாடும் கீர்த்தனைகள் ...
அலறிக்கொண்டு செல்லும் வாகனங்கள்..
இதற்கும் மேல்..
அண்டமே அதிரும் அளவு...
வான் கிழிக்கும் மின்னலும்
அதைத் தொடர்ந்த இடியும்...
அத்தனையும் மறந்து நீடித்தது மௌனம்...
வார்த்தைகள் இல்லாமல்
என் மீது அவள் சாய்ந்த பொழுது...


No comments:

Post a Comment