Monday 22 August 2011

என் தமிழ்

ழகரத்தில் வரும்
மொழி அழகும்
கிழவன் கிழவி
கிளவிகளும்..
என் தமிழுக்கே சொந்தம்...
வல்லின மெல்லின இடையினமாய்
தமிழ் , அம்மா , காதல்
என எல்லாம் என் தமிழுக்கே சொந்தம்...
மருந்துகள் இல்லாத காலத்திலே
மாத்திரை கணக்கிட்டது
என் தமிழுக்கே சொந்தம்...
கோடித் தமிழர் இருந்தாலும்
என் தமிழ் என சொல்லுவதே
என் தமிழுக்கு சொந்தம்...
கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தில் தோன்றியதும்..
கல்தோன்றிய பின் கல்வெட்டுக்களாய் தோன்றியதும்
என் தமிழே...
ஆங்கிலேயனும் அமெரிக்கனும் கற்றுக்கொள்கிறான்
என் தமிழுக்காக...
பகுத்தாறிவாளனும் இறையான்மை எழுதுவான்
என் தமிழுக்காக...
என் உயிரும் தமிழ்...
என் மெய்யும் தமிழ்...
உயிர்மெய்யும் தமிழ்...
அமிழ்தம் அருந்தியது தமிழ்...
சாகாவரம் பெற்றது என் தமிழ்...
உலகப்பொதுமறையும் என் தமிழ்...
உலகு மறையும் வரை மாளாது என் தமிழ்...


No comments:

Post a Comment